search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 கிலோ புகையிலை பறிமுதல்; மில் தொழிலாளிகள் கைது
    X

    12 கிலோ புகையிலை பறிமுதல்; மில் தொழிலாளிகள் கைது

    • திருச்சுழி அருகே 12 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மில் தொழிலாளிகள் கைதானார்.
    • காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்பட்டு வருவ தாக திருச்சுழி காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனையடுத்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியை அடுத்துள்ள தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சந்வதேகத்திற் கிடமாக சுற்றிதிரிந்த 2 நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் 2 நபர்களிடமும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சுமார் 12 கிலோ புகையிலை பொருட் கள் இருந்தது தெரியவந்தது.சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து அவ்வப் போது பொது வெளியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இதையடுத்து புகையிலை பதுக்கி விற்றதாக மில் தொழிலாளிகள் மேலகண்ட மங்கலம் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜ் (வயது 37). வெள்ளையாபுரம் தெற்கு தெரு பகுதி யை சேர்ந்த ஆழ்வார் சாமி மகன் ஞானகுரு (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×