என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சதுரகிரிக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்லலாம்
- சதுரகிரிக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்லலாம் என வனத்துறை அனுமதியளித்துள்ளது.
- 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர்.
விருதுநகர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புரட் டாசி மாத மகாளய அமாவாசை, பிரதோ ஷத்தை முன்னிட்டு வருகிற 12-ந்் தேதி முதல் 15-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை யினர் அனுமதி அளித்துள் ளனர்.
ேமலும் சதுரகிரி கோவி லில் ஆனந்தவல்லி அம்ம னுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கியமான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண் டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வருகிற 22 முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை யேற அனுமதிக்கப்படு வார்கள். 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் கத்தி போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இரவில் கோவிலில் தங்க அனுமதி யில்லை. மழை வந்தால் பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதிக்கப் படாது உள்ளிட்ட கட்டுப் பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்