என் மலர்
விருதுநகர்
ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.
இந்தநிலையில் மனைவிமீது நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரிமுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவுக்கும், குருசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மனமுடைந்த குருசெல்வி கடந்த டிசம்பர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் மாரிமுத்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் திடீரென அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,573 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 16,309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தபடவில்லை. மாவட்ட சுகாதாரத் துறையினர் நேற்று மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை நோய் பாதிப்புக்கு 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,569ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தததில் 16, 524 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
16,307 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு 57 மூடை ( 2½ டன் அரிசி) ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி வாயிலாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
இதையடுத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2½ டன் அளவுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை வத்திராயிருப்பு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி குருசெல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. முத்துபிரியா என்ற 7 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் குருசெல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து பலமுறை மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டில் விட்டுவிட்டு மாரிமுத்து கடைக்கு சென்றுவிட்டார்.
இந்த சமயத்தில் குருசெல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரிமுத்து வீடு திரும்பியபோது வீட்டில் மனைவி மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து, நேற்று இரவு அதே மின் விசிறியில் தனது மனைவி தூக்கு போட்ட சேலையாலேயே தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் உடனே பேசி சுமுகமான தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சாத்தூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஜோதி முப்பிடாதி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் பரசுராமன், பார்வர்டு பிளாக் தொழிற் சங்க பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சாத்தூர் சி.ஐ.டி.யூ. செயலாளர் ரமேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
எனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கூட்டுறவு சங்கங்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசையும் போக்குவரத்து துறையையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உஜ்ஜிசாமி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கலுவனச்சேரியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (46). தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் அருகில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு படுக்க சென்று விட்டார்.
இவரது மனைவி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து, வீட்டுக்குள் புகுந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தைத் திருடி விட்டு வெளியே செல்ல முயன்றனர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஜெயலட்சுமி மர்மநபர்களை பார்த்தவுடன் சத்தம் போட்டார். ஆனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.






