search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி பேராசிரியை"

    • கேரள கும்பல் கைவரிசையா? தனிப்படை போலீசார் அதிரடி
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ்.

    பேராசிரியையிடம் நகை பறிப்பு

    இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரி யையாக பணி புரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மெர்லின் டயானாவின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர்.

    இது குறித்து மார்த்தாண் டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது தனிப்பிரிவு போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் விசாரணையை தீவிரப்ப டுத்தினர்.

    இதில் கேரளாவில் இருந்து அவ்வப்போது வந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குற்ற வாளிகளின் கைவரிசையாக இந்த சம்பவம் இருக்குமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி, கேரளா எல்லை சோதனை சாவடி யான களியக்காவிளை, கோழி விளை, ஊரம்பு, கண்ணுமாமூடு, புலியூர் சாலை, நெட்டா போன்ற சோதனைச் சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பினர் கூறும் போது, விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

    ×