என் மலர்
விருதுநகர்
இந்த நிலையில் தை அமாவாசை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைெயாட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வத்திராயிருப்பு வழியாக உள்ள தாணிப்பாறை மலைப்பாதை, மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்ஓடைப்பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானது முதல் அ.தி.மு.க.வில் பலரும் அவருக்கு மறைமுக மற்றும் நேரடி ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து தங்கும் விடுதிக்கு சென்ற சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடியும் கட்டப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்ட போதிலும் அவர்தான் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். எனவே கட்சி கொடி காரில் பறக்க விடப்பட்டது தவறு இல்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
வருகிற 8-ந்தேதி சசிகலா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அ.தி.மு.க.வில் சிலரும் சசிகலாவை வரவேற்று மற்றும் ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டிய வண்ணம் உள்ளனர்.
மதுரை, தேனி, திருச்சி என பல்வேறு ஊர்களிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது கட்சி தலைமை மேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் விருதுநகரில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் சென்னல் குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் எரணன், செல்லப்பாண்டி, மகேந்திரன் ஆகியோர் படம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையுடன் இந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
அதில், கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக, அடிமட்ட தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கி... சுய நலம் இல்லாமல் கழகத்தை காத்து இக்கழகம் இன்னும் நூற்றாண்டுக்காலம் ஆட்சி அமைத்து அம்மாவின் கனவை நினைவாக்க வருகை தரும் கழக பொதுச்செயலாளர் தியாக தலைவியே... தொண்டர்களை காக்க... வருக தாயே... என வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுவரை சசிகலாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் முதல் முறையாக உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது அ.தி.மு.க.வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). இவர் புதூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று மனோகரன் அரசு பஸ்சில் அருப்புக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மனோகரனின் மனைவி அம்பிகா, கணவரின் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக ஆஸ்பத்திரியில் தனது குழந்தைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனது கணவர் சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் எனது கணவரின் இறப்புக்கு உரிய காரணத்தை கண்டறியும் வரை உடலை வாங்க மாட்டேன என கூறினார்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு முரளிதரன் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் ஆகாத நிலையில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். முரளிதரன் கேட்டரிங் படித்து உள்ளார்.
வேலை கிடைக்காத காரணத்தால் சாத்தூரில் லாரி கிளீனிராக வேலை பார்த்து வந்தார். முரளிதரனுக்கு சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது .
இதனால் மன வேதனை அடைந்த முரளிதரன் சாத்தூரில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் முரளிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தாயில்பட்டி பவுன் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 45). இவர் தாயில்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தனது தோழி ஒருவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது பின்னால் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென அவர்கள் இருவரின் முகத்திலும் ஏதோ திரவத்தை ஊற்றி அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.
பின்னர் செண்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செண்பக வள்ளி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். செண்பகவள்ளியின் தோழி நகை ஏதும் அணிந்து செல்ல வில்லை. அவரும் நகை அணிந்திருந்தால் அதனையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருப்பார்கள்.
இந்த நகை பறிப்புச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






