என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு சித்ரவதை - வங்கி ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்கு
விருதுநகரை சேர்ந்த இளம்பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தனியார் வங்கி ஊழியரான கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
விருதுநகர்:
விருதுநகர் முத்துராமன் பட்டி குல்லூர் சந்தை ரோட்டை சேர்ந்தவர் அபிநயா (வயது 28). இவருக்கும் மன்னார்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மகேஸ்வரன் (36) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருமணம் முடிந்த பின்பு அபிநயா, தனது கணவருடன் அவர் வேலை பார்த்த நாகர்கோவிலில் தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார்.
இந்தநிலையில் அங்கு வந்த மகேந்திரனின் தாயார், சகோதரர், சகோதரி மற்றும் உறவினர்கள் மகேஸ்வரனின் மைத்துனரின் கடனை தீர்ப்பதற்காக அபிநயாவிடம் அவரது நகைகளை தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
அபிநயா முதல் பிரசவத்திற்காக விருதுநகரில்உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பிறந்துள்ளது இதனைத்தொடர்ந்து மகேஸ்வரன் அபிநயாவை மன்னார்குடிக்கு மாறுதல் கிடைத்தவுடன் அழைத்துச் செல்வதாக கூறி உள்ளார்.
அபிநயாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு 2-வது குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகளுக்கும் அபிநயாவின் பெற்றோர் 11 பவுன் நகை போட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் வந்த மகேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் அபிநயாவிடம் நகைகளை தருமாறு மீண்டும் கேட்டுள்ளனர்.
மேலும் தன்னுடன் மன்னார்குடிக்கு வந்தால் அபிநயா, பெற்றோருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று தகராறு செய்தததுடன் அபிநயாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அபிநயாவின் பெற்றோர் மகேஸ்வரனையும், அவரது உறவினர்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனை தொடர்ந்து மகேஸ்வரன், அபிநயாவையும் குழந்தைகளையும் அழைத்துச்செல்ல வரவில்லை.
இந்தநிலையில் அபிநயாவிடம் மகேஸ்வரனின் உறவினரான விருதுநகரை சேர்ந்த மாரிக்கனிஎன்பவர் மகேஸ்வரனுக்கு 2-வது திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அபிநயா விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரன் மற்றும்அவரது உறவினர்கள் கூடுதல் நகை மற்றும் பணம் நகை கேட்டு சித்ரவதை செய்தததாக புகார் கொடுத்ததின் பேரில் போலீசார், மகேஸ்வரன், அவரது தாயார் ராமேஸ்வரி (55), உறவினர்கள் சித்ரா(40), நாகேந்திரன் (38), ரோகிணி (37) மற்றும் விருதுநகரை சேர்ந்த உறவினர் மாரிக்கனி ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






