என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயில்பட்டி:
தாயில்பட்டி பவுன் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 45). இவர் தாயில்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தனது தோழி ஒருவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது பின்னால் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென அவர்கள் இருவரின் முகத்திலும் ஏதோ திரவத்தை ஊற்றி அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.
பின்னர் செண்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செண்பக வள்ளி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். செண்பகவள்ளியின் தோழி நகை ஏதும் அணிந்து செல்ல வில்லை. அவரும் நகை அணிந்திருந்தால் அதனையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருப்பார்கள்.
இந்த நகை பறிப்புச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தாயில்பட்டி பவுன் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 45). இவர் தாயில்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தனது தோழி ஒருவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது பின்னால் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென அவர்கள் இருவரின் முகத்திலும் ஏதோ திரவத்தை ஊற்றி அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.
பின்னர் செண்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செண்பக வள்ளி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். செண்பகவள்ளியின் தோழி நகை ஏதும் அணிந்து செல்ல வில்லை. அவரும் நகை அணிந்திருந்தால் அதனையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருப்பார்கள்.
இந்த நகை பறிப்புச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






