என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் பங்க்கில் பணப்பையை திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்6 Feb 2021 2:22 PM GMT (Updated: 6 Feb 2021 2:22 PM GMT)
பெட்ரோல் பங்க்கில் பணப்பையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
காரியாபட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வந்துள்ளனர். அங்கு பெட்ரோல் பங்க்கில் விற்பனையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த கரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜனிடம் அவர்கள் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டனர். அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு கொண்டு இருந்த போது நைசாக அங்கு பம்பில் வைத்திருந்த பணப்பையை மற்றொரு வாலிபர் திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். இதை கவனித்த சுந்தரராஜன், திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே சக ஊழியர்கள், பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் திருடிய பையில் பெட்ரோல் விற்பனை செய்த பணம் 7 ஆயிரம் இருந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காரியாப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த வெற்றிவேல்(வயது 21), அழகர் என்கிற பெரியசாமி(22) என தெரிய வந்தது. பெட்ரோல் பங்க் விற்பனையாளர் சுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X