என் மலர்
செய்திகள்

சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்:
சாத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் உடனே பேசி சுமுகமான தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சாத்தூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஜோதி முப்பிடாதி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் பரசுராமன், பார்வர்டு பிளாக் தொழிற் சங்க பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சாத்தூர் சி.ஐ.டி.யூ. செயலாளர் ரமேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
எனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கூட்டுறவு சங்கங்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசையும் போக்குவரத்து துறையையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் உடனே பேசி சுமுகமான தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சாத்தூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஜோதி முப்பிடாதி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. தொழிற் சங்க பொதுச்செயலாளர் பரசுராமன், பார்வர்டு பிளாக் தொழிற் சங்க பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சாத்தூர் சி.ஐ.டி.யூ. செயலாளர் ரமேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
எனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கூட்டுறவு சங்கங்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசையும் போக்குவரத்து துறையையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






