என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலை நீடித்தது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.
    விருதுநகர்:

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பூத் சிலிப் கொடுக்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அரசு சார்பில் பூத் சிலிப் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் பூத் சிலிப் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை.

    விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலை நீடித்தது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் வாக்குப் பதிவு நாளான இன்று விருதுநகர் சந்திமரத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஜி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை அரசு அதிகாரிகள் வழங்கினர்.

    இதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வைத்து பூத் சிலிப் வழங்கக்கூடாது என அவர்கள் கூறினர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட பா.ஜனதா தலைவர் கஜேந்திரன் அங்கு வந்து போலீசாரிடம் பேசினார். பூத் சிலிப் கொடுப்பது அரசு அதிகாரிகள்தான். இதில் தவறு என்ன? என அவர் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடியின் வெளியே நின்று பூத் சிலிப் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
    சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்து 500-யை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் மாரனேரி பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நடுத்தெரு பகுதியில் ஆய்வு செய்த போது அங்கு காசிராஜன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.10,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்ற தொழிலாளி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என கூறிக்கொண்டே திடீரென தனது கை விரலை துண்டித்துக் கொண்டார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் குருவையா (வயது 66). தொழிலாளியான இவர் தி.மு.க.வின் தீவிர விசுவாசி ஆவார். நேற்று காலை குருவையா இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என கூறிக்கொண்டே இருந்த அவர் திடீரென தனது கை விரலை துண்டித்துக் கொண்டார்.

    உடனே அங்கு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டி எஸ்.துரைச்சாமிபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள அறையில் சமத்துவபுரம் ரிசர்வ் லைனைச் சேர்ந்த தர்ம லிங்கம் (வயது45), கல்லம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகன் (35), துரைச் சாமிபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி (40) ஆகியோர் பட்டாசு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது பரவி வெடிக்க தொடங்கியது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தொடர்ந்து அறையில் இருந்த 3 பேரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதில் தர்மலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். வெடி விபத்தில் ஆலையின் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 2 அறைகளின் சுவர்கள் சேதம் அடைந்தன.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகன், கந்தசாமியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்ற சிவகாசியில் கடந்த 3 மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

    மேலும் பலர் தீக்காயம் அடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளது. தொடர் வெடி விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டாசு தொழிலாளர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் தபால் நிலைய சந்து அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிக்கனி (வயது 42) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த மேம்பாலம் சீரமைக்கப்படாத நிலையிலும் அருகில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    விருதுநகர்:

    மத்திய அரசு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்பு சாலை அமைப்பு பணிக்காகவும், பராமரிப்பு பணிக்காகவும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியது. தொடக்கத்தில் சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு தொகை ஈடாகிய பின்பு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

    ஆனாலும் தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்கான நான்கு வழி சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர் வட்டம், நாங்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே உள்ள எட்டூர் வட்டம் சுங்கச்சாவடியில் இதுவரை ரூ.85 ஒரு வழி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த காலங்களில் நான்கு வழிச்சாலை சீரமைக்கப்படாத நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை ஐகோர்ட்டு சாலை சீரமைக்கப்படும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதித்தும் மற்றும் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.

    இந்நிலையில் விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-

    எட்டூர் வட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முதல் ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆர்.ஆர். நகரில் உள்ள நான்கு வழி சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேதமடைந்தது. ஆனால் இதுவரை இந்த மேம்பாலம் சீரமைக்கப்படவில்லை. மேலும் ஒருவழிப்பாதையாக்கியதால் விபத்து பகுதியாக இந்த பகுதி மாறிவிட்டது.

    விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையை யும் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காத நிலையிலும் சுங்கச்சாவடி கட்டணத்தை மட்டும் உயர்த்த மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவசரம் காட்டுவது ஏன?் என்று தெரியவில்லை.

    எனவே இந்த கட்டண உயர்வுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன் மத்திய அரசு இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் நான்கு வழி சாலை விபத்துக்களை தவிர்க்க சேதமடைந்த மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தற்போது தொழிலாளர்கள் தினமும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட பின்னர் பணிக்கு செல்வதால் விபத்துகள் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி, சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த விபத்துக்களில் காயம் அடைந்த 30 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவங்களுக்கு பின்னர் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் இருப்பதும், தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் சிவகாசியில் உள்ள மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன், பட்டாசு ஆலைகளில் உற்பத்தியின் போது போதிய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கேட்டுக்கொண்டார்.

    பணிக்கு வரும் தொழிலாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி அன்றைய தினம் விபத்து இல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை எக்காரணத்தை கொண்டும் மீற கூடாது என்றும் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் சிவகாசியில் உள்ள 60 சதவீதத்துக்கு மேல் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தல் காரணமாக விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொழிலாளர்கள் வந்து செல்லும் வாகனங்களில் கூட இந்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர்கள், போர்மென்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோம் என்ற உறுதிமொழியை எடுத்து வருகிறார்கள். மத்திய அரசு அதிகாரிகளின் வலியுறுத்தல் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்தால் பட்டாசு ஆலைகளில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சிவகாசி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சானார்பட்டி விலக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதிவீரன்பட்டியை சேர்ந்த காசிநாதன் (வயது 46) என்பவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்த போது அவர் 48 மதுபாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோட்டில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள வேன்நிறுத்தம் அருகில் பழனிசாமி (42), அருண்பாண்டி (27) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    காரியாபட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,330 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே ஆவியூர் விவசாய தோட்டப்பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது ஆவியூர் தோட்டத்து பகுதியில் இருந்த ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 700 மதுபாட்டில்களையும், ஆவியூர் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 630 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்த மர்மநபர் யார்? என ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    விருதுநகர்:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக சாத்தூர் பறக்கும்படை அதிகாரி பாண்டி சங்கர் ராஜிக்கு தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையில் பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகரான வெள்ளதாய் (வயது28), ராஜ்குமார் (35), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தொகையை சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் கொடுத்ததாக பிடிபட்ட இருவரும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளத்தாய், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட நரிக்குடி அருகே உள்ள கம்பாளி பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர். அவர்களை கண்டதும் சாலையில் நடந்து சென்ற வாலிபர் தான் கையில் வைத்திருந்த பையை சாலை யில் வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.

    அந்த பையை பறக்கும் படையினர் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில், ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது. அதனை திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

    பணத்தை வீசிசென்ற வாலிபர் யார்? அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு சென்றாரா? என்பது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்திநகரில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறது என பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படையை சேர்ந்த உஷா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது பணப்பட்டு வாடா செய்ததாக கூறி அதேபகுதியை சேர்ந்த வெயிலா (வயது 50) என்ற பெண்ணிடம் இருந்து ரூ.42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல குருலிங்காபுரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக இன்பராஜ் (54) என்பவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா, இன்பராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் மாலையாபுரம் அருகே பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, அதில் 150 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ டிைரவர் மாலையாபுரத்தை சேர்ந்த முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    இதன்மதிப்பு ரூ.21 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மது பாட்டில்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×