என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 150 மதுபாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்3 April 2021 10:59 AM GMT (Updated: 3 April 2021 10:59 AM GMT)
ராஜபாளையம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் மாலையாபுரம் அருகே பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, அதில் 150 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ டிைரவர் மாலையாபுரத்தை சேர்ந்த முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன்மதிப்பு ரூ.21 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மது பாட்டில்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X