என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்படும் ‘திடீர்’ அம்மா உணவகம் செயல்படுகிறது.
    • அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்பட்டதால் ஏழை-எளிய மக்கள் பயனடைந்தனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போதும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர் நகரில் அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும், ரெயில்வே பீடர் ரோட்டிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் ஏழை-எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் பெண்கள் உள்பட 12 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.2000-க்கும் குறைவாக விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அம்மா உணவகத்தில் நாள்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு உணவுகள் விற்கப்பட வேண்டும். விற்பனை குறைந்தால் அம்மா உணவகம் மூடப்படும் என நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விற்பனையை அதிகரிப்பதற்காக ரெயில்வே பீடர் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார நிலையம் முன்பு ஊழியர்கள் தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

    சாலையோர கடை போல் இயங்கும் இங்கு பொதுமக்கள், பயணிகள் உணவருந்தி செல்கின்றனர். சாப்பிட்ட பின் இலையை அங்கேயே வீசிவிட்டு நடுரோட்டிலேயே கை கழுவி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக உணவகம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கியுள்ளன. எனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடீர் அம்மா உணவகத்தை சுகாதாரமான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்பட்டு வருவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    • பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க வேல்.இவரது மனைவி பாக்கியம் (வயது54). இதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவர் மகன் பிள்ளையார் சித்தன் (27). இவர் பாக்கியம் வீடு அமைந்துள்ள சந்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

    இதனால் விபத்து ஏற்படும் என்று பாக்கியம் அவரை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக பிள்ளையார் சித்தன், தனது தந்தை ராமரிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் ஆகியோர் பாக்கியத்துடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

    அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பெண்களும் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா பெண்களை தாக்கிய ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
    • இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருது வழங்குகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15 -ந் தேதி (வியாழக்கிழமை) தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    கலைஞர் அறக்கட்டளை சார்பில் பரிசு மற்றும் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முதன்மைச் செயலாளர் கே என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவு க்கரசுக்கும், பேராசிரியர் விருது விருதுநகர் குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • அருப்புக்கோட்டை அருகே பெய்த மழையால் சாலைகள் குளம் போன்று காட்சி அளிக்கின்றன.
    • பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் முத்தரையர் சிலை அருகே மழைக்காலங்களில் சாலையானது சேறும், சகதியுமாக, மிகுந்த பள்ளமாக குளம் போல் காட்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டையில் இருந்து செம்பட்டி வழியாக புலியூரான் தென்பாலை கிராமத்திற்கு பள்ளி பஸ்கள் மாணவர்களை அழைத்து வந்து செல்கின்றன.

    அந்தப் பகுதியில் தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. மில் வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    குளம் போல் காட்சி அளிக்கும் பாதையில் அரசு பஸ்களும், தனியார் பள்ளி வாகனங்களும் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று வருகின்றன. அதில் செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் இந்த சாலையில் பயணம் செய்கின்றனர்.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று செம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு வழங்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் ஜீவக்கல் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரவையின் மாநில துணைச் செயலாளர் பரலோகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன், நகர துணை செயலாளர் அறிவுமிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

    • சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.
    • கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்:

    சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 63). இவர் சாத்தூர் வெள்ளக்கரை ரோட்டில் நிதிநிறுவனம் நடத்தி வந்த சையது பாஷா என்பவரிடம் ரூ. 1லட்சம் சீட்டில் சேர்ந்தார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தினார்.

    தவணைக்காலம் முடிந்த பின் பணத்தை தராமல் சையது பாஷா ஏமாற்றினார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ. 68 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் சாத்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது சையது பாஷா ஆஜராகவில்லை. இதனால் மனு தள்ளுபடியானது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் சையது பாஷா ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.

    • தீயில் கருகி முதியவர் பலியானார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய தாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 62). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் வசிக்கும் தனது சகோதரி சரஸ்வதி வீட்டிற்கு ராமராஜ் வந்துள்ளார்.

    அன்றிரவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற ராமராஜ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர் தாதம்பட்டிக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினரும் கருதி விட்டனர்.இதற்கிடையில் சரஸ்வதி வீட்டில் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தில் உடல் கருகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் ராமராஜ் என தெரியவந்தது.

    வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினரான பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் பேசுகையில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மருந்து தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் உயிர் செயல் முறைகளில் திரவ இயக்கவியலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். உருவகப் படுத்துதல், தொழிற்முறை பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார்.

    திரவ இயக்கவியலில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். இதனால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இந்த துறை சம்பந்தமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட திரவ இயக்கவியல் ஆய்வகம் துணைபுரியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சுேரஷ்குமார் மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

    பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின் தொடக்கமாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நகர தலைவர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆர்.எஸ். எஸ். விஷ்வ இந்து பரிஷத், பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டம் பஞ்சு மார்க்கெட்டில் நடந்தது.

    அதை தொடர்ந்து ஊர்வலம் நடந்தது. விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமுத்து, ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    • கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    தேசிய கண் தானஇரு வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி சிலை அருகில் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனை கூட்ட அரங்கிற்கு வந்தது. பேரணியை இணை இயக்குநர் முருகவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

    அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சுரன் நர்சிங் காலேஜ் மாணவிகளின் கண்தான விழிப்புணர்வு பற்றிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை அன்னை சந்தியா கண்தான கழக நிறுவனர் நாகலட்சுமி வழங்கினார்.

    இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜெயபாஸ்கர், நூர்தீன், நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், இந்த விழாவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்பது குறித்தும் ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளரும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், பேரூர் சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் மலர்மன்னன், குமார், ஜெயந்தி, காந்தி, திருக்குமரன், ஜெயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    ×