search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு
    X

    ஆலோசனைக்கூட்டத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.

    முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு

    • முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகரில் வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், இந்த விழாவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்களுடன் பங்கேற்பது குறித்தும் ராஜபாளையம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளரும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், பேரூர் சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் மலர்மன்னன், குமார், ஜெயந்தி, காந்தி, திருக்குமரன், ஜெயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×