search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. முப்பெரும் விழா
    X

    தி.மு.க. முப்பெரும் விழா

    • விருதுநகரில் வருகிற 15-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
    • இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருது வழங்குகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15 -ந் தேதி (வியாழக்கிழமை) தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    கலைஞர் அறக்கட்டளை சார்பில் பரிசு மற்றும் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முதன்மைச் செயலாளர் கே என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவு க்கரசுக்கும், பேராசிரியர் விருது விருதுநகர் குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×