என் மலர்
விருதுநகர்
- மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் யுவராஜூடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீவானம்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் பிரபுவுக்கு கோர்ட்டு உத்தர விட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் பிரபு நேற்று இரவு சத்யாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை கைது செய்தனர்.
- பாம்பு கடித்து பெண்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (63). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காட்டுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் இன்டர் நேசனல் மாடர்ன் மார்ஷி யல் ஆர்ட்ஸ், மருது வளரிச் சிலம்பம் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டு உலக சாதனை போட்டியை நடத்தியது. இதில் பங்கு பெற்று பதக்கங்களும் சான்றிதழ்க ளும் பெற்று வந்த ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவி களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் மாஸ்டர் விஜயக்குமார், கிருஷ்ணாபுரம் கூட்டுறவு பேங்க் குட்டி நம்பிராஜன், கிளை செயலாளர் லட்சுமணன், அனந்தப்பன் பழனிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
- பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர்:
கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது. இவைகள் சர்வதேச அளவில் அதிக அளவில் விலை போகிறது. எனவே திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்து உள்ளது.
குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து விருது நகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் தலைமையிலான வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சில இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் (வயது 45) என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
தர்மராஜ் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்திவரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், பத்ம குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திமிங்கல எச்சம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
- சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.
இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.
ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.
- நகர்ப்புற நல வாழ்வு மையம் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
- சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங் களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி இடைய பொட்டல் தெருவில் பொது மக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 -22 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கணவரை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- விரைவில் பிடிபடுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம் பட்டியை அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அத்தை மகளான பிரியாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பாண்டி செல்வி(22) என்பவரை மதிமன்னன் 2-வது திரு மணம் செய்தார். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மதிமன்னனுக்கு தனது 2-வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாட்டி இறந்ததால் ஒரு வாரத்திற்கு முன்பு பாண்டி செல்வி அங்கு சென்று விட்டார். அந்த வீட்டிற்கு நேற்று மதிமன்னன் சென்றார். அவர் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்று மனைவி பாண்டிசெல்வியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாண்டிசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மதிமன்னனை கைது செய்தனர். மதிமன்னம் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் எழுத்து மூலமாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில் அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு முன்னதாக ராஜ பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மருத்து பரிசோத னைக்காக அழைத்து சென்றனர்.
இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்த கழிவறைக்கு சென்ற மதிமன்னன், ஆஸ்பத்திரியின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மதிமன்னனை பிடிக்க ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மதிமன்னனை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பியோடிய சம்பவம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உசார்படுத்தப் பட்டனர். இதனால் மதி மன்னன் விரைவில் பிடிபடு வார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- சிறுமி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி நல்லம்மாள் நகரை சேர்்நதவர் ரத்னா. இவரது 17 வயது மகள் பிளஸ்-2 ேதர்வில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால் ரத்னா அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் ரத்னா வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்ைல. இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தூர் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூசையப்பர், ஆடு வியாபாரி. இவரது மகள் வெண்ணிலா(வயது19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா வெளியூர் சென்று திரும்பியபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.
இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சுலோசனா(60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசோக்நகரில் உள்ள இவரது மகள் ராமதிலகம் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து சுலோசனாவும், ராமதிலகமும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சென்றனர். ராமதிலகம் வாகனத்தை ஓட்டிவந்தார். அப்ேபாது எதிர்திசையில் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த சுலோசனா படுகாயடைமந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரும்பு வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்்ந்தவர் சேரிப்பழம்(53), பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு சிவகாசியை சேர்ந்த வசந்த் என்ற வியாபாரி அறிமுகமாகி உள்ளார். அவர் பழைய இரும்பை ஏலம் எடுத்து தருவதாகவும், அதற்கு ரூ.2½ செலவாகும் என்றும் சேரிப்பழத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய அவர் கூகுள்-பே மூலம் வசந்திற்கு ரூ.2½ லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வசந்த் பழைய இரும்பை ஏலம் எடுத்து தரவில்லை. ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சேரிப்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வசந்த் மற்றும் சென்னையை சேர்ந்த சொர்ணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் ஜோடி மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
- ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் ஆலாஊரணி அண்ணாகாலனியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவர் சிவகாசி திருக்குளம் கண்மாய் ரோட்டில் வாள் மற்றும் கத்தியுடன் நின்றுகொண்டு அப்பகுதியில் வருவோரை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திருத்தங்கலை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக நின்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






