என் மலர்
விருதுநகர்
- தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழக அரசால் 1910-ம் ஆண்டில் தோட்டக்கலை சங்கத்திற்கு 23 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நிலம் தனிநபர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை ேமற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டில் 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதியிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலம் அ.தி.மு.க. பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்தார்.
அந்த வகையில் ஆக்கிரமிப்பில் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலங்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் அந்த இடத்தை கையகப்படுத்தி சீல் வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைவேலன் காவடி எடுத்தனர்.
- இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வைகாசி விசா கத்தை குழந்தை வேலன் காவடி நடைபெற்றது. இைத யொட்டி அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பல்வேறு காவடிகள் எடுத்து முத்தாலம்மன் கோவில், முருகன் கோவில், காய்ச்சல் கார அம்மன் கோவில், மாரி யம்மன் ேகாவில், பத்திர காளி அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.
அங்கு மாண வர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடு நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆறுமுகச்சாமி, கதிரேசன், சமுத்திரப்பாண்டியன் ஆகி யோர் செய்திருந்தனர்.
- ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
- பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 மற்றும் 4-ம் வகுப்பு கற்று தரும் ஆசிரியர்களுக்கு கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் நடராஜ் தலை மையில், மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதனை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னத்தின் முதல்வர் வெள்ளைத்துரை நேரில் பார்வையிட்டார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்தி ருந்தனர். பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
- ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.
ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மரகதவல்லி கோவிலில் கற்கோவில் கட்டும் பணி தொடங்கியது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள இருள்சிறை கிராமத்தில் மரகதவல்லி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கற்கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க புனித நீருடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பூமிபூஜை விழா நடந்தது. புனித நீரை கற்கோவில் கட்ட இருக்கும் இடத்தில் ஊற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் அமரர் ராமலிங்கம்- சரோஜா தம்பதியினரின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது. முகாமை லயன்ஸ் கிளப் ஆப் ராஜபாளையம் டவுண் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு ராஜபாளையம் டவுண் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்டேன்லி பிரின்ஸ் சித்ரராஜ் தலைமை தாங்கினார். அக்னி என்ற ரவி முன்னிலை வகித்தார். தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட பலர் முகாமில் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ராஜ பாளையம் மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
- ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
- கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் யுவராஜூடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீவானம்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் பிரபுவுக்கு கோர்ட்டு உத்தர விட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் பிரபு நேற்று இரவு சத்யாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை கைது செய்தனர்.
- பாம்பு கடித்து பெண்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (63). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காட்டுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் இன்டர் நேசனல் மாடர்ன் மார்ஷி யல் ஆர்ட்ஸ், மருது வளரிச் சிலம்பம் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டு உலக சாதனை போட்டியை நடத்தியது. இதில் பங்கு பெற்று பதக்கங்களும் சான்றிதழ்க ளும் பெற்று வந்த ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவி களுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் மாஸ்டர் விஜயக்குமார், கிருஷ்ணாபுரம் கூட்டுறவு பேங்க் குட்டி நம்பிராஜன், கிளை செயலாளர் லட்சுமணன், அனந்தப்பன் பழனிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
- பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர்:
கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது. இவைகள் சர்வதேச அளவில் அதிக அளவில் விலை போகிறது. எனவே திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்து உள்ளது.
குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து விருது நகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் தலைமையிலான வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சில இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் (வயது 45) என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
தர்மராஜ் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்திவரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், பத்ம குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திமிங்கல எச்சம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
- சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.
இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.
ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.






