search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு
    X

    விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு

    • விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.

    இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.

    ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    Next Story
    ×