என் மலர்
விழுப்புரம்
- மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
- 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப் பட்டது.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டிவனம் நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளை ச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், திண்டிவனம் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர், போக்குவரத்து கழக உதவி பொறியாளர்நேற்று திண்டிவனம் பஸ் நிலையம் ,திண்டிவனம்- மரக்காணம் சாலை மற்றும் செஞ்சி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா்.
இதில் 5தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், கண்கள் கூசும் அளவுக்குஅதிக ஒளியுடன் திகைப்பூட்டும் விளக்குகள் பொருத்தப் பட்ட 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது. 16 வாகனங்களை சோதனை செய்து அறிவிக்கை செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றிவந்த சரக்கு வாகனத்ைத நிறுத்தி சோதனை செய்தனர்.ஒரு வாகனத்திற்கு ரூ5 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது.
- .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
- மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (45)நேற்று இரவு இவரது வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கூரை வீடும் தீ பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் பயங்கர சத்தத்தை கேட்டு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரவர் வீட்டை விட்டு வெளியில் வெகு தூரம் ஓடி உள்ளனர். அப்போதுதான் சரசு வீட்டில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது .
உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி விட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரசு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது . இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார்.
- மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசிரவி துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி காந்த ரூபி வரவேற்றார்.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது,
இக்கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆணை , கிராமத்தி்ல் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு ,பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு கலெக்டர் பேசினார்
இதில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜோதி , மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் பொன்னம்பலம், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தாசில்தார் யுவராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி ,முபாரக் அலி பேக், வேளாண்மை உதவி இயக்குனர் கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், துணைத் தலைவர் கலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமராவ், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், கல்வி மேலாண்மை குழு ராஜசேகர்,கணேசன் புகழேந்தி ,வேல்முருகன், மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் தலைமைக தாங்கி பேசினார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணக்குமார் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன்,செல்வி ராம சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.இவரது மகன் கார்த்திக். இவருடைய மகள் பிரியதர்ஷினி (18) மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திக் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதில் தொரப்பாடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான தமிழரசன்(25) பிரியதர்ஷினியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அருகே ச.சிறுவாடி, ஓமிப்பேர், வடநற்குணம், நல்லம்பாக்கம், நகர் முன்னூர், ஆலங்குப்பம், அடைவள்ளிக்கூத்தான், வேப்பேரி, குருவூர், செட்டிகுளம், ராயநல்லூர், நாகப்பாக்கம், நாகல்பாக்கம், ஆலத்தூர் ஆகிய கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சாமந்திப்பூ பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுவை மற்றும் திண்டி வனம் மார்க்கெட்டுகளில் சாமந்திப் பூக்கள் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும், விவசாயிகளுக்கு கட்டு படியான விலை கிடைத்தும் வருகிறது. தொடர்ந்து பண்டிகை நாட்கள் உள்ளதால் சாமந்திப் பூவிற்கு நல்ல விலை கிடைக்குமென விவ சாயிகள் கருதுகின்றனர். இதனால் மரக்காணம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சாமந்தி பூச்செடி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.100-லிருந்து ரூ.120 வரை விற்பனையாகிறது.
- அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
- நோயாளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஒரு சில இடங்களில் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பெரும்பா லானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதனால் திண்டிவனம் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதில் தீவிர காய்ச்சல் உள்ள 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல், கபாசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயா ளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ மனையில் குறி ப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை கட்டும் பணியினை துரித ப்படுத்த வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
- துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர்.
- அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் நகர், மஞ்சு நகர் போன்ற பகுதிகளில் பன்றிகளுக்கான உணவுகளை ஓட்டலில் இருந்து கொண்டு வந்து தினந்தோறும் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்
- நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி வரவேற்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ. 40 லட்சம் மதிப் பில் சீர் செய்யவும் ஜெயங் கொண்டான் பேரணி சாலையை ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் விவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நாட்டா மங்கலம், புதுசொரத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் அக்பர் அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை சேகர் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி , சிலம்பரசி பாண்டியராஜன் அமைப்பு சாராதொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்வண்ணன், உள்ளிட் ேடார் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.கடந்த காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை தண்ணீர் நிரம்பி விவசாயிகளுக்கு பயிரிட தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதேசமயம் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் டன் உப்பை பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஜெபக் கூட்டம் நடைபெற்ற போது காலை 9.45 மணிக்கு அரங்கின் மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் பக்கவாட்டில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானர். 51-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பா கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் மாவட்டம் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.அவர், யெகோவின் சாட்சிகள் தவறான தகவல்களை கற்றுத்தந்து, தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனர். இதனால் அந்த மாநாட்டு அரங்கிற்கு வெடிகுண்டு வைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் யெகோவின் சாட்சிகள் குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக ஆரோவில் நுழைவு வாயில், மாத்ரி மந்திர், இஸ்ரேலை சேர்ந்த யெகோவின் சாட்சிகள் குழுவினர் 30 பேர் வசிக்கும் பகுதி ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச நகரமான ஆரோவில்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






