என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.
    • தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி யில்அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2-ம் கட்டமாக 6 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில்5325 மகளிர்களுக்குபணம் பெறுவதற்கு வங்கி அட்டையை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சேது நாதன், மயிலம் எம்.எல்.ஏ. சிவகுமார், சேர்மன்கள் சொக்கலிங்கம், யோகேஸ்வரி மணிமாறன்,நிர்மலா ரவிச்சந்திரன், தயாளன், ராஜாராம்,ராஜலட்சுமி வெற்றிவேல் , மாவட்ட பொருளாளர் வக்கீல் ரமணன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் தமிழரசன்,தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, திண்டிவனம் தாசில்தார் சிவா,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கலந்து கொண்டனர்.

    • பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
    • விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து தீபாவளியை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தங்களது பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களி லும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.

    நேற்று மாலை அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் சென்னை யில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வழியாக தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு வழிகள் திறந்து 8 வழிகளில் வாக னங்கள் அனுப்பி வைக்கப் பட்டது. நேற்று மாலையில் இருந்து இரவு 7.30 மணி வரை 35 ஆயிரம் வாகனங்க ளும், நள்ளிரவு கடந்து அதிகாலை 8 மணி வரை 55 ஆயிரம் வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேலும் அசம்பா விதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.
    • அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் தனியார் எடைமேடை அருகில் பட்டாசு கடை உள்ளது. இதனை விக்கிரவாண்டியை சேர்ந்த வாசு (என்கிற) நாகராஜ் நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு 10 மணிக்கு அரசு எம்பலம் பொறித்த கார் ஒன்று வந்தது. அதில் வருமான வரித் துறை என எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி இறங்கினார். பட்டாசு கடையை சுற்றிப் பார்த்த டிப் டாப் ஆசாமி, குழந்தைகளுக்கு தேவையான கலசம், கம்பி மத்தாப்பு, பேன்சி வெடிகள் போன்றவைகளை எடுத்துள்ளார். இதற்கு பில் போட சொன்னார். அவர் எடுத்து வைத்த பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 475 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.

    அந்த பில்லினை செக் செய்த டிப் டாப் ஆசாமி, பட்டாசுகளை பார்சல் செய்து காரில் வையுங்கள், நான் ஜிபே செய்கிறேன் என கூறியுள்ளார். அவர் அங்கிருந்த கிஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் போட முயற்சித்தார். அதற்கு சர்வர் பிசி என வந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அமர்ந்து 10 நிமிடம் கழித்து முயற்சித்தார். அப்போது பணம் அனுப்ப முயற்சித்தபோது பெயில்டு என வந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் முயற்சித்தும் பணத்தை அனுப்ப முடியவில்லை. உடனடியாக தனது பர்சை எடுத்த டிப்டாப் ஆசாமி, அதிலிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். அதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே இருந்தது. அங்கிருந்த பட்டாசு கடைக்காரரிடம், பர்சில் குறைவான பணம் மட்டுமே உள்ளது, காரில் பணம் இருக்கிறது, அதை எடுத்து வருகிறேன். அதற்குள் பட்டாசு பார்சலை காரில் வைக்குமாறு கூறினார்.

    இதனை நம்பிய பட்டாசு கடை ஊழியர்கள் பார்சல்களை காரில் ஏற்றினர். காருக்குள் அமர்ந்த டிப்டாப் ஆசாமி, காரிலிருந்த பையை திறந்து பணத்தை எடுப்பது போல பாசாங்கு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், காரினை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார். பட்டாசு கடை ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்குள், டிப் டாப் ஆசாமி வந்த கார் சாலையில் இருந்து மறைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாசு, விக்கிரவாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பட்டாசு கடைக்கு அருகில் இருந்த எடைமேடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். மரக்காணம் அருகே கொள்ளு மேடு விநாய கர்கோவில் தெருவை சேர்ந்த தையல் தொழிலாளர் அய்யப்பன் மனைவி மீனாட்சி (வயது 32) அந்த ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் வழக்கம்போல் மீனாட்சி ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இது பற்றி தகவல் தெரிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சி உடலை கைப்பற்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்து போன மீனாட்சிக்கு10 வயது மற்றும் 7 வயதுடைய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் .தனியார் ஓட்டலில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன மீனாட்சி உடலை வாங்க மருத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    • இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டையை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், சப்-கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
    • 2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் பாராம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு 2023––-24-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க அறிவித்துள்ளது.விருது பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலை துறையின் இணைய தள முகவரியில் நுழைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் . அல்லது மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாயி்கள் தங்களது சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தில் காய்கறிகள் பயிரிடுபவராகவும், பராம்பரிய காய்கறிகளை பயிரிடுபவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட குழுவில் சமர்பிக்கப் பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு விவசாயிகள் இருவரை தேர்வு செய்து ,மாவட்ட அள விலான அரசு விழா நடை பெறும் போது விவசாயிகளை கவுர வித்து அவர்களுக்கு விருது மற்றும் முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரம், 2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • போலீசார், சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    • ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள எசாலம் சாலையில் பிரசித்திப் பெற்ற லட்சுமி நாராயணா கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த நரசிம்மன் (78), நடராஜன் (70) ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஐம்பொன்னாலான லட்சுமி நரசிம்மர், நடராஜர், பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய உற்சவர் சிலைகள் இருந்தன. விசேஷ நாட்களில் இந்த உற்சவர் சிலைகள் விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்.

    இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு அர்ச்சகர் நடராஜன் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 5.30 கோவிலை திறப்பதற்கு அர்ச்சகர் நரசிம்மன் வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்களுடன் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, உற்சவர் சிலைகள் திருட்டுபோயிருந்ததை கண்டனர். அதன்படி பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய 3 உற்சவர் சிலைகள் திருட்டுபோயிருந்தது. மற்ற 2 உற்சவர்கள் மட்டும் கோவிலில் இருந்தது.

    இதையடுத்து ஊர் பிரமுகர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் இந்து அறநிலையத் துறையினருக்கும், பெரியதச்சூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியதச்சூர் போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் ஐம்பொன் உற்சவர் சிலைகள் உள்ளதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித் திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் பெரியதச்சூர் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். திருட்டுபோன 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என தெரிகிறது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஊரின் நடுவில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய வெள்ளிக்கிழமை தோறும் வேப்பூரில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் வேப்பூரில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு ஆடுகளை திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று வழக்கத்தை விட விலை 500 முதல் ஆயிரம் வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 1 மணி முதல் 7 மணிக்குள் 6 மணி நேரத்துக்குள் சந்தை வளாகத்தில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    ரூ. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்து உள்ளதாக தெரிவித்தனர். அதிக விலைக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் ஆட்டு சந்தை மற்றும் கருவாட்டு சந்தை பிரபலமானது. செஞ்சி கருவாட்டு சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் விழுப்புரத்தில் பிரபல கல்வியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆட்டு சந்தையும் பிரபலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது.

    அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடுகளை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். ஆடுகள் வரவும் அதிகமாக இருந்தது.

    வியாபாரிகளும் அதிகமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    இந்த வார சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
    • பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கொண்டு தொடரும் சிக்கல்களை தீர்க்கவும் நமது மாணவர்களிடம் புத்தாக்கத்தை தூண்டுவதே நிரல் திருவிழா நோக்கமாகும். இது அனைத்து தொழில்நுட்ப மாணவர்கள் படிப்புகளில் இறுதியாண்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் முக்கிய நோக்கம் அரசுத்துறைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் அறிந்து கொள்வது மற்றும் மாணவர்களிடம் உள்ள தீர்வு காணும் திறன்களை பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பாக அமையும். நிரல் விழாவில், புத்தாக்கப்பயிற்சியாக, அக்ரிடெக் மற்றும் உணவு தொழில்நுட்பம், சுத்தமான மற்றும் பசுமை தொழில்நுட்பம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், மெட்டெக்,பயோடெக், ஹெல்த், புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், ஸ்மார்ட் நகரம், கிராமப்புற வளர்ச்சி, ஸ்மார்ட் வாகனங்கள், கல்வி 4.0 போன்ற துறைகளின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்பாலமுருகன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர்.அருள், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக சிவ நடராஜன், ஊரக புத்தாக்கத் திட்ட பயிற்சியாளர் அனிதா, மேலாளர்ஆதர்ஷ் மிட்டல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் நேற்று மாலை திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போ லீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆனத்தூர் காலனியை சேர்ந்த ரவி மகன் ஜான் என்கிற ராஜ் (வயது 19), சென்னை புழல் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அபினேஷ் (20), சந்திரசேகரன் மகன் சுபாஷ் (22) ஆகிய 3 பேரும் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துனர்.அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 3 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
    • இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி -திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கல் கிராம எல்லையில் தனியார் கியாஸ் குடோன் உள்ளது. தீபாவளி சீசன் என்பதால் இன்று அதிகாலையில் சிலிண்டர்களை சப்ளை செய்வதற்காக நேற்று இரவு ஊழியர்கள் அவர்கள் கொண்டு செல்லும் டாட்டா ஏ.சி. மற்றும் மினி வேன் ஆகியவைகளில் சிலிண்டர்களை ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர் .சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி வைக்கப்பட்ட மினி வேனில் இருந்து சிலிண்டர் வெடித்ததால் திடீரென வேன் தீப்பிடித்தது. இது மிக உயரத்தில் தெரிந்ததால் இது குறித்து அங்கு இரவு காவலில் இருந்த பரசுராமன் ஓடிச் சென்று அருகில் இருந்த டீக்கடைக்காரர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த டீக்கடைக்காரர் விரைந்து வந்து இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    விபத்து ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சி2 லிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஒரு மினி வேன் பகுதியாக எரிந்தது. உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் வேன்களில் இருந்த 400 சிலிண்டர்கள் மற்றும் குடோனில் இருந்த சுமார் 100 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனில்இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு 2 சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    டெல்லியை சேர்ந்தவர் சித்ரஞ்சன் நாயக். இவர் தனது மனைவி பக்கிரா, மகள் தாரா நாயக் (வயது 12) ஆகியோருடன் புதுவை மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். இவர் ஆரோவிலில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தங்கும் விடுதியின் 5-வது மாடியில் உள்ள அறையில் சித்ரஞ்சன் நாயக் தங்கினார். அப்போது அறையை விட்டு வெளியில் வந்த தாரா நாயக்கின் அலறல் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியில் வந்தனர்.

    அப்போது தாரா நாயக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்ட பெற்றோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார், சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேணும் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×