என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதில் பஸ்சிற் காக காத்திருக்கும் பயணி கள் அமர்வதற்காக இரும்பி லான சேர்கள் போடப்பட்டி ருந்தது.இந்த நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மணக்குப் பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணக்குப் பத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

    பாலா மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஆய்வின்போது ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையினை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாடு முதல்- அமைச்சர் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசிய உணவு ப்பொ ருட்கள் தங்குதடை யின்றியும் தரமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோ கம் செய்யப்ப ட்டு வருவதை பார்வையி ட்டதுடன், இந்நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொரு ட்களின் விவரம் மற்றும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ம், அத்தியாவசியப் பொருட்க ளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நியாய விலைகடைக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தி யாவ சியப்பொரு ட்கள் முறை யாக கிடைக்கப்பெ றுகிறதா எனவும், தரமாக உள்ளதா எனவும், பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக மாற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்த ஆய்வின்போது, ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.14,875 அபராதம் விதிக்கப்பட்டு, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபு ரியும் ரேஷன் கடை பணியா ளர்கள் மாற்றுப்பணி அல்லது துறை ரீதியாக பணிக்கு செல்லும் போது அறிவிப்பு பலகையில் கைப்பேசி எண் மற்றும் பணிக்கு செல்லும் விவரம் குறித்து எழுதி வைத்திட வேண்டும் என கலெக்டர் பழனிதெரிவித்தார்.ஆய்வின்போது, செஞ்சி வருவாய் தாசில்தார் ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 48),ஆறுமுகம் (32),வெங்கடேசன் (35) மற்றொரு ஏழுமலை (35) ஆகியோர் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்கானிப்பாளார் முகேஷ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம்,வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
    • திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனம்:

    தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையில், தலைமை காவலர்கள் இளந்திரையன், கவிராஜா, மகாமார்க்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 4128 மதுபாட்டில்களை (725 லிட்டர்) காரில் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேட்டைக்கு காரில் கடத்தி வருவதை அறிந்தனர். அந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது போலீசார் மீது மோதுவது போல் வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர். அதில் புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.

    அந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பதும் அவரது காரை ஓட்டி வந்தவர் வானூர் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது.

    இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார்.
    • மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், இடையஞ்சாவடி ஊராட்சியில், புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையஞ்சாவடி ஊராட்சி, வி.ஐ.பி நகரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் 850 மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார். ஆய்வின்போது, வானூர் வருவாய் தாசில்தார் நாராயணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆனத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. மினி லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது மினி லாரியில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தப்பட்டதை கண்டனர். இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி வட்டம் உளுந்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    • இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.
    • இதற்காக பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் உள்ள பாப்பான்குளத்தில் வசிப்பவர் பழனிசாமி (வயது 41). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து தினமும் வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறார். தேனி மாவட்டம் தேவாரம் வட்டம் உத்தபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25), திண்டுக்கல் மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த அருண்குமார் (27) ஆகிய இருவரும் தினமும் பணத்தை வசூல் செய்யும் பணிசெய்து வந்தனர்.

    இவ்விருவரும் நேற்று முன்தினம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசூலுக்கு சென்றனர். இரவு 9 மணிக்கு விழுப்புரத்திற்கு லேசான காயங்களுடன், முன்பக்கம் உடைக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளுடன் திரும்பினர். நாங்கள் இருவரும் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள இருவேல்பட்டு ஏரிக்கரை அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பலை தங்களை வழிமறித்து தாக்கியதாகவும், பையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகவும், உயிர் பிழைத்து வந்ததாகவும் பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமியிடம் கூறினர்.

    இதையடுத்து பைனான்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, 2 பேரையும் ஆபீஸ் ரூமிற்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். தீபாவளி செலவுக்கும் பணம் இல்லை. இதற்காக பணம் கொள்ளையடி க்கப்பட்டதாக நாடகமாடியதாக ஈஸ்வரன், அருண்குமார் கூறியுள்ளனர். மேலும், பணத்தை இருவேல்பட்டு ஏரிக்கரை அருகேயுள்ள பனைமரத்தின் கீழ் பள்ளம் தோண்டி புதைத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு இருவேல்பட்டு ஏரிக்கரைக்கு விரைந்த பழனிசாமி, பனைமரத்தின் அடியில் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவங்களை கூறி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், பணம் திருடு போனதாக நாடகமாடிய ஈஸ்வரன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.
    • ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமை யாக முடிக்கப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவ டிக்கை மேற்கொ ள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழி வகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பி க்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணத்தை தாட்கோ வழங்கும். இத் தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • ரமேஷ் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் ரமேஷ் (42). இவர் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக திருக்கனூர் சென்று விட்டு காப்பியம் புலியூர் செல்வதற்காக பனையபுரம் கூட்டுச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிசென்ற லாரி இவர் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இந்த தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரமேஷின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×