காய்கறி சாகுபடி விவசாயிகள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்:உதவி இயக்குனர் தகவல்

மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காய்கறி சாகுபடி விவசாயிகள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்:உதவி இயக்குனர் தகவல்
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் பாராம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு 2023––-24-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க அறிவித்துள்ளது.விருது பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலை துறையின் இணைய தள முகவரியில் நுழைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் . அல்லது மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயி்கள் தங்களது சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தில் காய்கறிகள் பயிரிடுபவராகவும், பராம்பரிய காய்கறிகளை பயிரிடுபவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட குழுவில் சமர்பிக்கப் பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு விவசாயிகள் இருவரை தேர்வு செய்து ,மாவட்ட அள விலான அரசு விழா நடை பெறும் போது விவசாயிகளை கவுர வித்து அவர்களுக்கு விருது மற்றும் முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரம், 2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com