search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே 90 இரும்பு ஜாக்கிகளை திருடியவர்கள் மீது வழக்கு
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே 90 இரும்பு ஜாக்கிகளை திருடியவர்கள் மீது வழக்கு

    • இதனை தரையில் வைத்து அதன்மீது இரும்பு தகடுகளை போட்டு கடந்த 3-ந் தேதி தளம் ஒட்டப்பட்டது.
    • இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியில் கிருஸ்துவ மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டடித்தில் தளம் ஒட்ட, இரும்பிலான ஜாக்கிகள் 350 வரவழைக்கப்பட்டது. இதனை தரையில் வைத்து அதன்மீது இரும்பு தகடுகளை போட்டு கடந்த 3-ந் தேதி தளம் ஒட்டப்பட்டது.

    இந்நிலையில் கட்டிடத்தின் சூப்பர்வைசர் விஜயகுமார் நேற்று தளத்தை பார்வையிட வந்தார். அப்போது அவர் தளத்திற்கு முட்டுக் கொடுக்கப்பட்ட 90 ஜாக்கிகள் திருடப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரும்பு ஜாக்கிகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×