என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அருள் (வயது 50), நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏலகிரி மலையை சேர்ந்தவர் அருள் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். அவரது மனைவி சாந்தி. இன்று காலை ஏலகிரி மலையில் அருள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அருளை காரில் கடத்தி சென்றனர். நடைபயிற்சிக்கு சென்ற அருள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சாந்தி அவரை தேடி வந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்கள் கணவர் அருளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம்.
ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் அருளை விடுவிப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம்- சென்னை செல்லும் தண்டவாளத்தில் புளியமங்கலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றகனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.
தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டாக்டர்கள் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்தனர்.
சாப்பிடாமல் இருந்ததால் முருகன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். இதனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்தை கைவிட கோரி நளினி-முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று நளினி நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார் என முருகனின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில் 55 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 20 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து போலி டாக்டர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையிலான குழுவினர் 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி டாக்டர்கள் பலர் கிளினிக்கை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர். குடியாத்தம் பகுதியில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டர்கள் பெரியப்பா, ராகவன் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
மேலும் ஊசூர் கூட் ரோட்டில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் மஞ்சுளா, கத்தாழம்பட்டு கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் பரமேஸ்வரி ஆகியோரை சுகாதாரத்துறையினர் பிடித்தனர்.
4 போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவம் பார்க்க பயன்படுத்திய ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க சுகாதாரத்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை சேலம் பயணிகள் ரெயில் பழுதாகி நின்றது.
இதனை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 42) என்ஜின் மெக்கானிக். இவர் பணியில் ஈடுபட்டார்.
சேதமடைந்த பேண்டோ கம்பியை தூக்கிக் கொண்டுவந்து கொடுத்தும் அதனை பொருத்தும்பணி செய்தார். இதனையடுத்து சேலம் ரெயில் புறப்பட்டுச் சென்றது. பணி முடிந்த பிறகு தண்டவாளம் அருகில் இருந்த கோபிநாதன் அதனை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபிநாதன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது உடலை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் கதறி அழுதனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வந்தனர்.
2 பேரும் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் இன்று 11-வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை நளினி கைவிட்டார்.
நளினியுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை காரணமாக தனது உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் 20-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
வெளிநாட்டு குளிர்பானத்தை முற்றிலுமாக விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் உள்ளூர் குளிர்பான குளிர்சாதன பெட்டிகளை கேட்டுள்ளோம். விரைவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.
வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். கண்டிப்பாக பரிசீலனை செய்வார். இல்லாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
புதிய சினிமா படம் சி.டி.க்களாக வெளியிட்ட போது அதனை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுத்தது. தற்போது வியாபாரிகளை காக்க நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிக்கக் கூடாது.
வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 37-வது மாநில மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளோம்.
பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க மத்திய மந்திரியிடம் மனு அளித்துள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 18-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இன்று காலை டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 2-வது நாளாக அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் 2 பேரும் உண்ணாவிரதத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.






