search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் ஜெயிலில் 20-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

    வேலூர் ஜெயிலில் முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உறவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டாக்டர்கள் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்தனர்.

    சாப்பிடாமல் இருந்ததால் முருகன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். இதனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

    உண்ணாவிரதத்தை கைவிட கோரி நளினி-முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று நளினி நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

    முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார் என முருகனின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.


    Next Story
    ×