என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poisonous snake"

    • கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் வெள்ளகோவில் பகுதிகளில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகர், குமாரவலசு, கல்லாங்காடு வலசு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வங்கி, சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன. நேற்று காலை உப்புபாளையம் ரோடு, சக்தி நகர் விஜயகுமார் என்பவர் வீட்டின் முன்பு 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதை அறிந்த விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    ×