என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழுதான ரெயிலை சீரமைத்த ஊழியர் ரெயிலில் சிக்கி பலி
Byமாலை மலர்5 Nov 2019 7:18 AM GMT (Updated: 5 Nov 2019 7:18 AM GMT)
ரெயில்வே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை சேலம் பயணிகள் ரெயில் பழுதாகி நின்றது.
இதனை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 42) என்ஜின் மெக்கானிக். இவர் பணியில் ஈடுபட்டார்.
சேதமடைந்த பேண்டோ கம்பியை தூக்கிக் கொண்டுவந்து கொடுத்தும் அதனை பொருத்தும்பணி செய்தார். இதனையடுத்து சேலம் ரெயில் புறப்பட்டுச் சென்றது. பணி முடிந்த பிறகு தண்டவாளம் அருகில் இருந்த கோபிநாதன் அதனை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபிநாதன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது உடலை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் கதறி அழுதனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X