என் மலர்tooltip icon

    வேலூர்

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம் செய்யப்படும்
    • மின் அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் துணை மின் நிலையம், இறைவன்காடு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபிச ர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கிருஸ்ணாநகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்கா நத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஒல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி ரோடு அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், மற்றும் விரிஞ்சிபுரம், பொய்கை, இறைவன்காடு, செதுவாலை, வல்லண்ட ராமம், கந்தனேரி, கழனிபாக்கம் மருதவல்லி பாளையம். அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    ஆற்காடு துணை மின் நிலையம், மாம்பாக்கம் துணை நிலையம், பூட்டுத்தாக்கு மற்றும் கத்தியவாடி துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஹவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணா வரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம். ரத்தினகிரி, கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், கன்னிகபுரம், சனார்பண்டை, மேல குப்பம், கிழ்செங்கநாத்தம் மேல்செங்கநாத்தம்.

    மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • போதையில் மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1000 எடுத்து சென்றார்
    • போலீசில் புகார்

    வேலூர்:

    காட்பாடி தாலுகா கழிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 43). கட் டிட மேஸ்திரி. இவர் சம்பவத் தன்று காகிதப்பட்டறையில் நடந்து சென்றபோது, வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணேசன் மகன் மணி (வயது 24) என்பவர் போதையில் தேவேந்திரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துச்சென்று விட்டார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத் தில் தேவேந்திரன்' புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணியை கைது செய் தனர். மேலும் அவரிடமிருந்த 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • அவருடைய கையில் ஆங்கில எழுத்தால் பச்சை குத்தப்பட்டிருந்தது
    • கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது. அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.

    ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். வேலூர் மாநகரின் முக் கிய பகுதியாக திகழும் கோட்டையில் தற்கொலை, வழிப்பறி, கொலை நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை
    • வெறிநாய்கள், பன்றிகள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வேண்டும்

    வேலூர்;

    காட்பாடி 14-வது வார்டு பகுதியில் இதுவரை எந்த வித வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் ரங்கநாதன், செயலாளர் கணேஷ், துணைத் தலைவர் கண்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    ராதாகிருஷ்ணா நகர் பகுதியில் சாலை வசதி, கழிவு நீர், கால்வாய், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் மாடுகள், காளைகள் வெறிநாய்கள், பன்றிகள் போன்றவைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்களை எழுப்பினர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா
    • வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது

    வேலூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த விழாவை காணவும், ஏழுமலையானை தரிசனம் செய்யவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

    வேலூர் மண்டல அரசு போக்குவரத்து க்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து தற்போது திருப்பதிக்கு 10 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் வருகிற 23-ந்தேதி மாலை வரை இயக்கப்பட உள்ளன என்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையொட்டி சிறப்பு மஹா பிரத்யங்கரா, நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் பெண்கள் பக்தி பரவசத்தில் அருள் வந்து ஆடினார்கள்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, தலைமை குருக்கள் டி.எஸ். சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சித்தூரை சேர்ந்தவர்
    • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்


    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வேப் பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(வயது 39). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சசிகுமார் அவ்வப்போது வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது, உறவினரின் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சசிகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மாணவியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் மாணவி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்தார்.

    சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் கைதான சசிகுமாரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்

    வேலூர்:

    மகாளய அமாவாசை யொட்டி இன்று ஏராள மானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோ ர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    மகாளய அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மனைவி கண்டித்ததால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சுதீஷா. மணிகண்டன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    இந்த நிலையில் சுதிஷாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றும் மணிகண்டன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதிஷா கணவரிடம் 3-வது குழந்தை பிறந்த பிறகும் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என கேள்வி எழுப்பினார்.

    மேலும் இது குறித்து தனது தந்தையிடமும் தெரிவித்துள்ளார். சுதிஷாவின் தந்தையும் மணிகண்டனை கண்டித்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி பார்க்கலாம்
    • வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு

    வேலூர்:

    வேலூர் கோட்டை சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தலைமுறை பேரவை, மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நாராயணி மருத்துவமனை சார்பில் போலீசாருக்கான இதய பரிசோதனை முகாம் இன்று நடந்தது.

    முகாமிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன் கவுதமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக நாராயணி மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    நாராயணி மருத்துவ மனை குழும தலைவர் டாக்டர் பாலாஜி பேசுகையில்:-

    இந்த முகாமில் போலீசார் கலந்து கொண்டு இதய சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முகாமில் இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களை ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும்.

    போலீசார் தங்களின் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். மூளை எவ்வளவு வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் மற்ற உறுப்புகளும் வேலை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் போலீசாரும் மருத்து வர்களும் இந்த உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தெரியும். சிரிப்புதான் சிறந்த மருந்து.

    தினமும் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் மனிதனாக பிறந்த அனை வருக்கும் மன அழுத்தம் உண்டு.

    அது நானாக இருந்தாலும் அதானி அம்பானியாக இருந்தாலும் ஒன்றுதான். டி.வி.யில் வரும் நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்க வேண்டும்.

    ஜப்பானில் 100 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதுதான். தற்போது புது புது வியாதிகள் வருகிறது.

    அதனால் போலீசார் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் குமரன், பெப்சி சீனிவாசன் பி.டி.கே. மாறன் சதீஷ்குமார் பூமிநாதன் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
    • விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

    வேலூர்:

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.

    இதில் நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு, தொழிலாளர் வழக்கு, விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்ப ட்டவர்களுக்கு வழக்குக்கான இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவி டப்பட்டது.

    • சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேப்பங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. சாக்லேட் உள்ளிட்ட பல வடிவங்களில் போதை பொருள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.

    மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

    இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.

    ×