என் மலர்tooltip icon

    வேலூர்

    • பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
    • கரும்பு உள்ளிட்ட 3 பயிர்களுக்கு காப்பீடு வழங்க அரசு அனுமதி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

    இதுகுறித்து, வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;

    வேலூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

    விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், ஏற்கனவே பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே, கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடிக்கான வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில், எதிர் பாராத புயல் சீற்றம், கன மழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதன்மூலம் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் தங்களை இணைத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு ரபி பயிர் பருவத்தில்

    வேலூர் மாவட்டத்திற்கு நெல் (சம்பா), நெல் (நவரை), மற்றும் கரும்பு உள்ளிட்ட 3 பயிர்களுக்கு காப்பீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. மேலும் அரசு இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தின் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது.

    விதைக்க நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு, அறுவடைக்கு பிந்தைய இழப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேலும், பயிர் காப்பீடு செய்வது மிகவும் எளிமையாக்கப்ப ட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமையமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு தொகையை செலுத்தலாம்.

    எனவே, வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பெங்களூருக்கு -5, திருச்சிக்கு - 5 என இயக்கப்பட உள்ளது
    • சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஆயூதபூஜை விஜயதசமி முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை என்பதால் பொது மக்கள் வசதிக்காக சென்னை பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.

    வேலூருக்கு-50 பஸ்கள், ஆற்காடு 10 பஸ்கள், ஓசூர்- 10 பஸ்கள், தர்மபுரி- 5 பஸ்கள், குடியாத்தம்-10, திருப்பத்தூர்-20 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதேப்போல் வேலூரிலிருந்து பெங்களூருக்கு -5 பஸ்கள், திருச்சிக்கு - 5 பஸ்கள் என இயக்கப்பட உள்ளது.

    மேலும் வருகின்ற 24 மற்றும் 25-ந்தேதிகளில் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு ஏதுவாக வேலூரிலிருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்
    • காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊணை வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு பாதுகாத்து வருகின்றார்.

    இந்தநிலையில் நேற்று நிலத்திற்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. அருகே சென்று பார்த்தபோது ஆண் காட்டுபன்றி இறந்து கிடந்தது தெரிந்தது.

    இதுகுறித்து ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

    வனத்துறையினர் இறந்து கிடந்த பன்றியின் உடலை மீட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பினர். பின்னர் காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்.

    • அலறி அடித்து ஓட்டம்
    • பரவமலை காப்புக்காட்டில் கொண்டுபோய் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் அதே பகுதியில் கடைவைத்துள்ளார்.

    இந்த நிலையில் கோவிந்தம்மாள் நேற்று கடைக்கு சென்றார். அப்போது கடையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைப்பார்த்த அதிர்ச்சி யடைந்த கோவிந்தம்மாள் கத்தி கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருந்த வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமை யிலான குழுவினர் கடையில் இருந்த 5 அடி நீளம் கொண்டு நல்ல பாம்பை மீட்டு அருகே இருந்த பரவமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்தது
    • புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விஷேச தினங்கள் உட்பட முக்கிய நாட்களில் பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

    200 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் கட்டிடங்கள் சிதிலமடைந்த காணப்பட்டு வந்தது. இதனை புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் யாகசாலைகள் அமைத்து கலசங்கள் வைத்து பூமி பூஜைகள் செய்தனர். வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகத்திக்கீரை கொடுத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 65). கடந்த 14-ந் தேதி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சேகர் மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சேகரை மாடு முட்டி தூக்கி எறிந்தது. இதில் சேகர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக சேகரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி விற்றால் நடவடிக்கை
    • கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைக்க அனுமதி இல்லை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வியாபாரிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிக்கபடுகிறது.

    ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-

    உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    பட்டாசு கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும்.

    மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து

    இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • கலெக்டர் பேச்சு வார்த்தையில் சமரசம்
    • அனைவரும் கலைந்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு 1200 பெண் பணியாளர்களும், 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணியாளர்க ளுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

    இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல், பழையபடியே சம்பளம் வழங்கப்படுகிறது.

    கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் அவகாசம் கேட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தை யும் நடத்தவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் நேற்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது கலெக்டர், உங்களுடைய கோரிக்கை விரைவில் சுமூக முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து காணப்பட்டார்
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம். இவருடைய மனைவி ஹேமலதா (வயது 40) இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே ஹேமலதா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மகள்கள் வந்து பார்த்த போது ஹேமலதா தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர்
    • அவகாசம் வழங்கியும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூரில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 7 தனியார் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் துறை களை ஆக்கிரமிப்பு செய்தவர்களே அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை.

    இதனை அடுத்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கால அவகாசம் வழங்க வலியுறுத்தினர். அப்போது செங்கல் சிலை உரிமையாளர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை மூலம் அரவை கொப்பரை நியாயமான சராசரி தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்.ஏ.எப்.இ.டி மூலம் வரும் நவம்பர் 26-ந் தேதி வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலூர் ஒழுங்கு முறை விற்ப னைக்கூடம், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவற்றில் தலா 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலச்சிட்டா, அடங்கல் சான்றுகளுடன் வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்து பயன் பெறலாம். விளை பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்- 88705- 80901, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் 79047-60772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 36). இவர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். ஆசிரியை தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு பைக்கில் சென்று வருவது வழக்கம்.

    இன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    காட்பாடி கல்புதூர் அருகே சென்றபோது முதியவர் ஒருவர் சைக்கிளில் திடீரென குறுக்கே வந்தார். அப்போது தனலட்சுமி ஓட்டிச் சென்ற பைக் நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. தனலட்சுமி கீழே விழுந்தார். அப்போது காட்பாடியில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற லாரி தனலட்சுமி மீது எதிர்பாராத விதமாக ஏறி இறங்கியது.

    இதில் தனலட்சுமி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×