என் மலர்tooltip icon

    வேலூர்

    • வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது
    • மல்லி பூ கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது

    வேலூர்:

    ஆயுத பூஜை நாளில் வீடு, பட்டறை, தொழிற்சா லைகள் உள்பட வணிக வளாகங்கள் அனைத்தும் தூய்மை செய்து சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு நாளை ஆயுத பூஜையும், விஜயதசமி 24-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பூஜை பொருள்கள் வாங்க வேலூர் மாநகரில் உள்ள கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட மளிகை கடை வியாபாரிகள் கூறியதாவது;

    ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜைக்கு 2 நாட்களுக்கு முன்பு படையலுக்கு தேவையான பொரி, வெள்ளை சிவப்பு கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, அவல், நாட்டு சர்க்கரை நிலக்கடலை, விபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, ஊதிபத்தி, கற்பூரம், கடலை உருண்டை, எள் உருண்டை, அலங்கார தோரணங்கள் உள்ளிட் டவைகள் விற்பனைக்கு வைக்கப்படும்.

    நாளை ஆயுத பூஜை என்பதால், வெளி மாநிலங் களில் இருந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்து ள்ளோம். வழக்கமாக வாங்கும் அளவில் இருந்து 30 சதவீதம் கூடுதலாக வாங்கி உள்ளோம். அந்த வகையில், சிவப்பு கொண் டைக்கடலை ரூ.80 முதல் ரூ.90 வரையும், வெள்ளை கொண்டை க்கடலை ரூ.130 முதல் ரூ.150-க்கும், நாட்டுச்சர்க்கரை ரூ.70 முதல் ரூ.100-க்கும் நிலக்கடலை ரூ.120, அவல் ரூ.50, பொரி ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல், பழங்கள், பூசணிக்காய், ஸ்வீட் கடைகளில் இனிப்பு. காரம் ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பெரிய சாமந்தி கிலோ ரூ.400,சிறிய சாமந்தி ரூ.150 முதல் ரூ. 300 வரையும், சிறிய பன்னீர் ரோஜாகிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரையும், மல்லி கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், முல்லை கிலோ ரூ.700 -க்கும், கன காம்பரம் கிலோ ரூ.1,000 -க்கும், சாதி மல்லி கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.

    மேலும் பூஜை முடிவில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய், இதை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தேங்காய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது.

    • ஜெயிலில் அடைத்தனர்
    • குளியல் அறையில் பிணமாக கிடந்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (38). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான வசந்தகுமார் மனைவி அஞ்சலியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தினந்தோறும் அவரை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அதிகாலை வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கியவாறு அஞ்சலி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அஞ்சலி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வசந்தகுமார் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட வந்தது
    • கீழே கொட்டி அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவர்கள் உத்தரவு பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லேரி மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சின்டெக்ஸ் டேங்க், தண்ணீர் பேரல்கள் போன்றவகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் வாலிகள் மூலம் 2000 லிட்டர் சாராய ஊறல்களை தோண்டி எடுத்தனர். பின்னர் மேலே காண்டு வந்து கீழே கொட்டி அழித்தனர்.

    மேலும் சாராயத்தை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் அழித்துவிட்டு பூமிக்கு அடியில் குழி தோண்டி சாராயத்தை காய்ச்ச பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இறந்தது கிடந்து
    • உடலை தீயிட்டு எரித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் வளர்த்து வருகிறார்.

    நேற்று எத்திராஜ் விவசாய நிலத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

    உடனே அங்கு சென்று பார்த்த போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று 2 நாட்களுக்கு முன்பாக இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையில் வனக்காப்பாளர்கள் சங்கீதா, வெங்கடேஷ் ஆகியோர் இறந்து கிடந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மான் இறந்தது தெரியவந்தது.

    பின்னர் மானை வனத்துறையினர் கைப்பற்றி தீயிட்டு எரித்தனர்.

    • ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது.
    • ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் சரக்கு பெட்டியில் பழம் நிரப்பப்பட்ட பெட்டிகள் மற்றும் பழ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

    அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுமதி செய்யப்பட்டதால், ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ரெயில் மெதுவாக சென்றது.

    இதுகுறித்து எஞ்சின் டிரைவர் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டது.

    அப்போது தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரக்கு பெட்டியில் இருந்த பழ மூட்டைகளை பாதி இறக்கினர்.

    இதனையடுத்து ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதை கேட்டு பொதுமக்கள் போராட்டம்
    • உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர், ஓட்டேரி, காந்தி நகரில் உள்ள சுடுகாட்டை ஒட்டி பூந்தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. பூந்தோட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் சுடுகாட்டில் ஒரு பகுதியை சாலையாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிலர் இன்று காலை சுடுகாட்டை சுற்றிலும் வேலி அமைக்க வந்தனர். இதனைக் கண்ட பூந்தோட்டம் பகுதி மக்கள் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். மேலும் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன தொட்டாளத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவர் அந்த பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரியாங்குப்பம் புதுமணையை சேர்ந்த பிரபல ரவுடி அமெரிக்கா என்கிற ராஜேஷ் என்பவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடந்து சென்ற மோகனை வழிமறித்து ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டினார்.

    அதற்கு மோகன் தன்னிடம் பணம் இல்லை என மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மோகனை சரமாரியாக தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதேபோல் சின்ன தொட்டாளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38). என்வரிடமும் ராஜேஷ், அவரது நண்பர்கள் கதிர்வேல், ராதா, பிரபு ஆகியோர் ராஜ்குமாரிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து மோகன், ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக மேல்பாடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    • 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    காட்பாடி ஏரிமுனை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுகுமார் (வயது 55), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சத்திய ஜீவகுமாரி. இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை சுகுமார் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய மனைவியை பைக்கில் வேலூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சுகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி, எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி
    • மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்

    வேலூர்:

    சீன ராணுவத்தினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

    எல்லையை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஆண்டுதோறும் அக்.21-ந்தேதி வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் திரளான போலீசார் கலந்துகொண்டு நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது போலீசார் வானத்தை நோக்கி 16 துப்பாக்கி குண்டுகள் முழங்கி அஞ்சலி செலுத்தினர்.

    • அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டார்
    • பணிகளை தரமாக செய்து முடித்திட உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கணேசபுரத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் அலுவலகப் பணிகள், திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்போதய நிலை, வரி இனங்களின் வசூல் விவரம், குறித்து கேட்டறிந்தார். மேலும் வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தி நிலுவையின்றி வசூலிக்க வேண்டும்.

    திட்டப் பணிகள் அனைத்தும் உரிய கால அளவிற்குள் பணிகளை தரமாக செய்து முடித்திட உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் ச.பவானிசசிகுமார், செயல் அலுவலர் கி.அர்ச்சுணன், அலுவலக பணியாளர்கள் திருமால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கொலையாளி மணப்பாறையில் கைது
    • 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில்,துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (வயது 35) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

    அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப்படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

    இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • பங்கேற்க கலெக்டர் அழைப்பு
    • முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

    குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் வேலூர் மாவட்ட அளவி லான கலைப் போட்டிகள் வரும் 29-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் வெங்க டேஷ்வரா மேல்நிலைப்பள்ளி, ஆபிசர்லைன், வேலூர். என்ற முகவரியில் நடக்கிறது. இப்போட்டியில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை,

    குரலிசைப் போட்டி யிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், போன்ற கருவி இசைப்பேட்டியிலும், பரதநாட்டிய போட்டியிலும் அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

    ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும்.

    நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×