என் மலர்
வேலூர்
- கலெக்டர் பேச்சு வார்த்தையில் சமரசம்
- அனைவரும் கலைந்து சென்றனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு 1200 பெண் பணியாளர்களும், 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த பணியாளர்க ளுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல், பழையபடியே சம்பளம் வழங்கப்படுகிறது.
கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் அவகாசம் கேட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தை யும் நடத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் நேற்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது கலெக்டர், உங்களுடைய கோரிக்கை விரைவில் சுமூக முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து காணப்பட்டார்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம். இவருடைய மனைவி ஹேமலதா (வயது 40) இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஹேமலதா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மகள்கள் வந்து பார்த்த போது ஹேமலதா தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர்
- அவகாசம் வழங்கியும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூரில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 7 தனியார் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் துறை களை ஆக்கிரமிப்பு செய்தவர்களே அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை.
இதனை அடுத்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கால அவகாசம் வழங்க வலியுறுத்தினர். அப்போது செங்கல் சிலை உரிமையாளர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை மூலம் அரவை கொப்பரை நியாயமான சராசரி தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்.ஏ.எப்.இ.டி மூலம் வரும் நவம்பர் 26-ந் தேதி வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் ஒழுங்கு முறை விற்ப னைக்கூடம், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவற்றில் தலா 100 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலச்சிட்டா, அடங்கல் சான்றுகளுடன் வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்து பயன் பெறலாம். விளை பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்- 88705- 80901, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் 79047-60772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 36). இவர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். ஆசிரியை தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு பைக்கில் சென்று வருவது வழக்கம்.
இன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
காட்பாடி கல்புதூர் அருகே சென்றபோது முதியவர் ஒருவர் சைக்கிளில் திடீரென குறுக்கே வந்தார். அப்போது தனலட்சுமி ஓட்டிச் சென்ற பைக் நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. தனலட்சுமி கீழே விழுந்தார். அப்போது காட்பாடியில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற லாரி தனலட்சுமி மீது எதிர்பாராத விதமாக ஏறி இறங்கியது.
இதில் தனலட்சுமி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- அதிகாரிகள் தகவல்
- வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்றனர்
வேலூர்:
வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு பகுதியில் கடந்த மாதம் 20-ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
அந்த குழந்தையை அங்குவிட்டு சென்ற பெற்றோர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அதனை விட்டு சென்ற பெண் குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. அதனால் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் சென்னையில் உள்ள தத்து நிறுவனத்திடம் குழந்தை வழங் கப்பட உள்ளது.
இந்த குழந்தையின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்று குழந்தை பாது காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி, விருதம்பட்டு அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று தனது வீட்டு குளியல் வேலை அறையில் ஒயரிங் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சை க்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1000 பேர் பங்கேற்பு
- பணிகள் பாதிப்பு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களிலும் 1200 பெண் பணியாளர்களும் 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த பணியா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்காமல் பழையபடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை அவகாசம் கேட்டனனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பகுஜன் சமாஜ் ஒப்பந்த பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் இன்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ பிஎப் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இ.எஸ்.ஐ.பி.எப். தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலியை உயர்த்து வழங்க விட்டால் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
- சாலையை கடந்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜெகதா (வயது 70). இவர் கொணவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் காலை கொணவட்டம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஜெகதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெகதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.வி.குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- போக்சோவில் கைது
- சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
வேலூர்:
ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த பலமநேரி அருகே உள்ள பெத்தபஞ்சாணி பகுதியைச் சேர்ந்தவர் காலேஷா (வயது 25). இவர் குடியாத்தம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகை போடும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் காலேஷா, வழக்கம் போல் காட்பாடி 'சாலையில் உள்ள கடைகளுக்கு புகைபோட சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காலஷாவை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அனைத்து மகளிர் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தில் காலேஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
ஆம்பூரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 24) இவரது நண்பர்களான விக்னேஷ் (23) ராம்குமார் (28) ஆகியோர். வேலூரில் இருந்து கலைச்செல்வனை ஆம்பூரில் விடுவதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.
வெட்டுவானம் அடுத்த சின்னகோவிந்தம்பாடி அருகே வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்க சக்கரத்தில் கலைச்செல்வன் சிக்கினார்.
பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வன் இறந்தார்.
தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ராம்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பள்ளிகொண்டா போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
- சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு
- கும்பலுக்கு வலைவீச்சு
வேலூர்:
குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.ரோடு, விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன்(வயது 61). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தனது பைக் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து பெட்டியை திறந்து பார்த்த போது பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குபேந்திரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






