என் மலர்tooltip icon

    வேலூர்

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • 300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியாகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவராஜபாளையம், காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான முள் கத்திரிக்காய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

    அதிக சுவை கொண்ட இந்த முள் கத்தரிக்காயை பல்வேறு தரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    முள் கத்திரிக்காயில் புரதம், வைட்டமின்-சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்களும் மிகுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 300 ஹெக்டேர் பரப்பளவில் முள் கத்திரிக்காய் சாகுபடியாகிறது.

    45 முதல் 60 நாளில் மகசூலுக்கு தயாராகும் இந்த முள் கத்திரிக்காய் செடியில் தொடர்ந்து 5 மாதங்கள் வரை மகசூல் பெற முடியும். இதன்மூலம், ஓர் ஏக்கருக்கு 16 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் முள் கத்திரிக்காய் சாகுபடியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வறட்சி, நோய்களை தாங்கி விளையக்கூடிய இந்த முள் கத்தரியில் சாம்பார், பொரியல், தொக்கு, வற்றல் உள்ளிட்டவற்றை சமைக்க முடியும். முள் கத்தரிக்காய் பஜ்ஜியின் சுவையும் அதிகம்.

    அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட முள் கத்தரி வகையில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இலவம்பாடி முள் கத்திரியின் நிறம், சுவை, எடை உள்ளிட்டவை தனி ரகம் என்றே கூறலாம். வேறு எந்த மாவட்டத்திலும் இலவம்பாடி முள் கத்திரிக்காய் விளைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு வட்டத்தில் இலவம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் பெரியளவில் விளைவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் தனிச்சிறப்பு கொண்ட இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. சென்னை கோயம்பேடு, பெங்களூரு உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு மிகுநத வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அண்டை மாநிலங்க ளுக்கு ஏற்றுமதி புவிசார் கிடைத்த பிறகு வியாபாரிகள் சிலர் கிராமத்துக்கே நேரடியாக வந்து முள்கத்திரிக்காய்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால், விவசாயி களுக்கு கூடுதல் செலவும், நேரமும் மிச்சமாகிறது. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு அதிக ரித்துள்ள மவுசு காரணமாக சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இருந்து இலவம்பாடி முள் கத்திரிக்காய் அண்டை மாநிலங்களுக்கும்வி ற்பனைக்காக அனுப்பப்படு கின்றன. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருப்பதால் அதுகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.

    கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி பயிற்சி அளித்தாலும் நல்லதுதான். விவசா யிகளுக்கும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது" என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒருவர் கைது
    • ரோந்து பணியில் சிக்கினார்

    அணைக்கட்டு:

    வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 50) என்பதும், இவர் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது.
    • மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.

    இதனால் கீழே விழுந்த குரங்கிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாயில் தனது வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளையும் வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார். இதனையடுத்து குரங்கு உயிர் பிழைத்து அங்கிருந்து சென்றது.

    மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்
    • பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது

    வேலூர்:

    2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டியலில் பெயர், சேர்ப்பு, நீக்கல் தொடர்பான சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

    வேலூர் மாவட்டத்தி ற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க வசதியாக, நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் அடங்கிய பட்டியல், தேர்தல் ஆணையத்தில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொகுதி வாரியாக ஒவ்வொரு பக்கமும் மீண்டும் சரிபார்க்கப்படும்.

    இதில் திருத்தம் இருப்பின், வருகிற 27-ந் தேதி நடக்கும் சுருக்கத்திருத்த பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சரிபார்ப்பு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் 5 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

    • நவராத்திரி பூஜை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம், காமாட்சி அம்மன் சமேத மகாதேவ மலை கோவிலில் நவராத்திரி பூஜை முன்னிட்டு, மகா யாகம் நடந்தது.

    இதையொட்டி மகா தேவமலை சாமி, காமாட்சி அம்மன், விநாயகர், குருதட்சணா மூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சாமி சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூஜையை மகானந்த சித்தர் தொடங்கி வைத்தார்.

    கடந்த 14-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த யாகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    யாக பூஜையில் அமைச்சர் துரைமுருகன், துரை சிங்காரம், மகானந்த சித்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் பாஸ்கர், தொழில் அதிபர்கள் ஸ்ரீராம், அனு ரெட்டி, வக்கீல் முனிசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பைக் 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது
    • தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற ரோகித்ராஜ் (வயது 19). 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் விடுதலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு நண்பர்களை பார்ப்பத ற்காக வேலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வரும்போது அந்தவழியாக வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த ரோகித்ராஜ் ஓட்டிச் சென்ற பைக், அங்குள்ள 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ரோகி த்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளம்பர பலகை மாட்டியபோது பரிதாபம்
    • பெங்களூருவை சேர்ந்தவர்கள்

    வேலூர்:

    கர்நாடக மாநிலம் ெங்களூரு டேனி ரோட்டை சேர்ந்தவர்கள் சலீம் (வயது 22). கவுஷிக் (25). இவர்கள் இருவரும் பிரபல தனியார் ஆயில் நிறுவனத்தின் விளம்பர பலகை பொருத்துவது சம்பந்தமாக டெண்டர் எடுத்து வேலை செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் ராணிப்பேட்டை ஆற்காடு வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆயில் விற்பனை செய்யும் கடைகளில் மாட்டப்பட்டு இருந்த பழைய விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு புதிய விளம்பர பலகைகளை பொருத்தினர்.

    ஊசூரை சேர்ந்த சரவணன் என்பவர் குளத்து மேடு பகுதியில் ஆயில் மற்றும் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சலீம், கவுஷிக் இருவரும் சென்றனர்.

    அப்போது கடையின் உரிமையாளர் சென்னைக்கு சென்று இருந்தார்.இதையடுத்து 3-வது மாடிக்குச் சென்ற இருவரும் அங்கு புதிய விளம்பர பலகையை பொருத்தம் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் விளம்பரப் பலகை உரசியது.

    இதில் 2 வாலிபர்கள் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் ஏற முயன்றதால் விபரீதம்
    • போக்குவரத்து விதிகளை பின்பற்ற போலீசார் அறிவுரை

    வேலுார்:

    ஓசூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் வேலூர் புது பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.

    அப்போது, ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ஒரு குடும்பம் அந்த பஸ்சில் ஏற முயன்றனர்.

    அப்போது பஸ் படியிலிருந்து 2 வயது பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி யடைந்து கூச்சலிட்டனர்.

    சுதாரித்துகொண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால், பஸ் சக்கரத்தில் சிக்காமல், காலில் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக குழந்தை உயிர் தப்பியது.

    உடனடியாக பெற்றோர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    ஓடும் பஸ்சில் ஏற வேண்டாம். அதிவேக பயணம் ஆபத்தில் முடியும். போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். வாகனங்களில் செல்ப வர்கள் தலைகவசம் அணிய வேண்டும்.

    ஆனால் அதனை பெரும்பா லானோர் மதிப்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நடக்கிறது. எனவே பொது மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்தசம்பவம் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வனச்சரகர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று வழி தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென இவரது கிணற்றில் தவறி விழுந்தன.

    இதனை கண்ட சண்முகம் கிணற்றில் 2 மான்கள் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான வீரர்கள் தீயனைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    காயம் அடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து வனச்சரகர் இந்து உத்தரவின்பேரில் அருகே இருந்த கருத்தமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 26). இவர் கே.வி. குப்பத்தில் இருந்து காட்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சென்னாங்குப்பம் தனியார் பள்ளி அருகே சவுந்தரராஜன் என்பவர் சைக்கிளில் சாலையை கடந்தார். எதிர்பாராத விதமாக தனசேகர் ஓட்டிச் சென்ற பைக் சவுந்தரராஜன் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தனசேகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்ட நெரிசல் ஏற்பட்டது
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

    அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.

    இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அதிகாலையில் மொத்த விற்பனையும், காலை 7 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். இதில் புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக கடந்த மாதம் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    மீன்கள் விற்பனை மட்டுமின்றி ஆடு, கோழி, நண்டு உள்ளிட்ட புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து விற்பனையும் வெகுஜோராக நடந்தது. அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் மீன் மார்க்கெட் வளாகம் நிரம்பி வழிந்தது. இதனால் சற்று நெரிசல் ஏற்பட்டது.

    பெரும்பாலான மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. சிலவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.

    ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 1100 முதல் ரூ.1500-க்கும், இறால் ரூ.250 முதல் ரூ.300-க்கும், வவ்வால், கட்லா மீன்கள் ரூ.250-க்கும் விற்பனையானது. அதேபோல் சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை செய்தனர்
    • உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுரை

    வேலூர்:

    நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்தனர்.

    இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த தாசில்தார்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், டிஆர்ஓ மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பட்டாசு விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    இந்தநிலையில், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள பட்டாசு கடையில், தாசில்தார் செந்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது, கடை உரிமையாளர் ஜனார்த்தனனிடம், கடைக்கான லைசென்ஸ் உள்ளதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடையில் அவசர கால வழி திறந்த நிலையில் உள்ளதா?, கடையில் அனுமதிக்கப்பட்ட அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா?, தீத்தடுப்பு கருவிகள் காலாவதி ஆகாமல் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    மேலும், சீனா பட்டாசுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை செய்யக்கூடாது. அரசின் வழிகாட்டுதல் முறையாக பின்பற்றி, பட்டாசு விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பட்டாசு கடை உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாசில்தார் செந்தில் அறிவுரை வழங்கினார்.

    ×