என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்
- ஒருவர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
அணைக்கட்டு:
வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 50) என்பதும், இவர் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Next Story






