என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் படியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் தப்பியது

- ஓடும் பஸ்சில் ஏற முயன்றதால் விபரீதம்
- போக்குவரத்து விதிகளை பின்பற்ற போலீசார் அறிவுரை
வேலுார்:
ஓசூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் வேலூர் புது பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.
அப்போது, ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ஒரு குடும்பம் அந்த பஸ்சில் ஏற முயன்றனர்.
அப்போது பஸ் படியிலிருந்து 2 வயது பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி யடைந்து கூச்சலிட்டனர்.
சுதாரித்துகொண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால், பஸ் சக்கரத்தில் சிக்காமல், காலில் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக குழந்தை உயிர் தப்பியது.
உடனடியாக பெற்றோர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
ஓடும் பஸ்சில் ஏற வேண்டாம். அதிவேக பயணம் ஆபத்தில் முடியும். போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். வாகனங்களில் செல்ப வர்கள் தலைகவசம் அணிய வேண்டும்.
ஆனால் அதனை பெரும்பா லானோர் மதிப்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நடக்கிறது. எனவே பொது மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தசம்பவம் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
