என் மலர்tooltip icon

    வேலூர்

    • பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னத்துரை காளியம்மன் கோவில் எதிரே தனியார் பஸ் ஒன்று ஒடுகத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை முந்தி செல்வதற்காக விஜயகாந்த் முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி பஸ்சின் அடியில் பைக் சிக்கிதால் தவறி கீழே விழுந்ததில் விஜயகாந்த் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, தனியார் பஸ் டிரைவர் வேப்பங்குப்பம் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் நடக்கிறது
    • ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் 800 ஆண்டுகள் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. கெங்கையம்மனிடம் ஊரை காக்கும் தெய்வமாக பக்தியுடன் வேண்டி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    உள்ளூர், வெளியூர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அம்மனை தரிசிக்க தவறாமல் இங்கு வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி இலக்கிய விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 39-வது விஜயதசமி இலக்கிய விழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.

    இதில் தினமும் மாலை 4 மணிக்கு முதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அடுத்த நிகழ்ச்சியும் நடைபெறும். இலக்கிய விழாக்களுக்கு சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக்குழு தலைவருமான எஸ்.எம்.சுந்தரம், செயலாளர் உலகநாதன், பொருளாளர் ஜெ.ஞானசேகரன், சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ்.சுகுமார், பொருளாளர் மார்க்கபந்து மற்றும் நகராட்சி முன்னாள் தலைவர் ஜி.முருகன், முன்னாள் துணைத்தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை வேலூர் முன்னாள் எம். எல்.ஏ.சி.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் 'தெய்வம் நீ என்றும் உணர்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரின் தனி உரை நிகழ்ச்சியும், 'வாழ்வில் நிம்மதியும் மகிழ்வும் தருவது கனிந்த மனமே- நிறைந்த பணமே' என்ற தலைப்பில் கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் சிந்தனை பட்டிமன்றமும், 'அன்பே தவம்' என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் சொற்பொழிவும், டெலிவிஷன் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் மக்கள் இசை தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும், 'வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பில் தொலைக்காட்சி புகழ் அருள் பிரகாசத்தின் தனி உரையும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் கவிஞர் அரு.நாகப்பனின் நிலையான பயனும் மகிழ்ச்சியும் அளிக் கும் பாடல்கள் எது? என்ற தலைப்பில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

    சிறப்பு அழைப்பாளர்களாக கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகு மார்,ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர்கள் ஆர்.பி.ஏழுமலை, சுமதி மனோகரன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த சமுதாய மரபினர் மற்றும் விஜயதசமி இலக்கிய விழா குழு தலைவர் எஸ்.எம். சுந்தரம் உள்ளிட்ட விழா குழு வினர் செய்துள்ளனர்.

    • 30 பேர் கைது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மல்லிகா வரவேற்றி பேசினார். சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

    தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 அகவிலை படியுடன் சேர்த்து வழங்க வேண்டும் 10 வருடம் பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் முருகேசன் மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசார் அனுமதி இல்லா ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 2 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சமும், .இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக ளுக்கான ஈமச்சடங்கு தொகை ரூ.17 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    • காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பாதிக் கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன.

    அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் டெங்கு பாதிப்புக்குள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

    இந்த நிலை யில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கொசப்பேட்டை யில் நேற்று ஒருவர் உட்பட 4 பேர் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதே போல் குடியாத்தத்தில், 22 வயது மற்றும் 25 வயது கொண்ட ஆண்கள் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெற்றது.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன.

    இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ.7.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம்
    • விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பாலூர், மசிகம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது.

    பக்காலபள்ளி என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிக்கெட்டு ஓடி சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சத்யா, சக்தி,நதியா, ஆட்டோ டிரைவர் சரத்குமார், ராணி, மல்லிகா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி நேரங்களில் விதிகளை மீறி ஆட்டோவில் அதிக அளவில் பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் ஏற்றி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டினார்
    • வனத்துறையினர் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், கல்லுட்டை 13-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த தேவி என்ற பெண் கவுன்சிலர் உள்ளார்.

    இவரது கணவர் சிவகுமார்(50). இவர் அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், பெண் கவுன்சிலர் தேவியின் கணவன் சிவகுமார் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட தைல மரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றார்.

    இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை கைப்பற்றினர்.

    இதற்கிடையே, சிவகுமார் வனத்துறையினர் வருவதையறிந்ததும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்து றையினர் தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
    • தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

    பின்னர் அங்கு இருந்த 20 லிட்டர் சாராய பொட்டலங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய எல்லுப்பாறை மலைகிராமத்தை சேர்ந்த சிவா என்பவரை தேடி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி.யிடம் மனு
    • பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

    பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்க ளுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

    திருவலம் அருகே அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி (வயது 42) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடத்திற்க்கு முன் இறந்துவிட்டார்.

    என்னுடைய மகன் கராத்தே பயிற்சிக்கு அம்முண்டியில் சந்தை அருகே சென்றார்.அப்போது ஆற்காடு அருகில் உள்ள சாத்தூர் கிராமத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர்கள் 2 பேரிடம் கராத்தே பயிற்சி மைய விரிவாக்கத்திற்காக ரூ6.75,000 கடனாக கொடுத்தேன்.

    அவர்கள் கடந்த ஜூன் மாதம் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். பின்பு மீதமுள்ள தொகையை கேட்கும் போது என்னை அலைக்கழித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாது என்கின்றனர்.

    என்னுடைய பணம் ரூ5,75,000 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருவலம் அருகே உள்ள சீக்கராஜபுரத்தை சேர்ந்த அசோக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017-ம் ஆண்டு காட்பாடியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை.

    அந்த பணத்தை எனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே அந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.

    வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது பேத்திக்கு 5 வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறுமி அவரது உறவினர் வீடடுக்கு சென்றார்.

    அப்போது உறவினர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    • பேரணாம்பட்டு அருகே சாலை வசதி கேட்டு போராட்டம்
    • பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு பேரணாம்பட்டு நகரத்திற்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் இந்த கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

    பலமுறை சாலை அமைத்து தர கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரூ.90 ஆயிரம் வசூலானது
    • வனச்சரக அலுவலர் தகவல்

    வேலூர்:

    வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா.

    ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்த அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.

    அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

    மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாள்களும், பூங்கா திறந்திருக்கும்.

    இந்நிலையில் விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையொட்டி பூங்கா திறந்திருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர்.

    கடந்த 21-ந் தேதி 344 பார்வையாளர்களும், அன்றைய தினம் ரூ.12,610-ம், 22-ந் தேதி 791 பார்வையாளர்களும், ரூ.28,110-ம், 23-ந் தேதி 845 பார்வையாளர்களும், ரூ.29,350-ம், நேற்று 752 பார்வையாளர்களும், ரூ. 26,020 என மொத்தம் கடந்த 4 நாட்களில் 2,732 பார்வையாளர்களும், அதன்மூலம் ரூ.96 ஆயிரத்து 90 ரூபாய் வசூலாகி உள்ளதாக அமிர்தி வனச்சரக அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.

    ×