என் மலர்
நீங்கள் தேடியது "Amriti Park"
- தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்
- வணத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல்பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப்பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.
காணும் பொங்கலையொட்டி அமிர்தி பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அமர்தி பூங்கா வளாகப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பூங்காவில் வனத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். நாளை பூங்கா நுழைவுவாயில் மற்றும் விலங்குகள் கூண்டுகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பூங்காவிற்கு வருபவர்கள் விலங்குகள் பறவைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.மது அருந்தி விட்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேலும் பூங்காவிற்கு மதுபானங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழை காரணமாக அமிர்தி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல வேண்டாம்.
ஆற்றிலும் சில இடங்களில் ஆழமான பகுதிகள் உள்ளன.அந்த இடங்களில் தெரியாமல் சென்று குளிக்க வேண்டாம். இதன் மூலம் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக அமிர்தி பூங்காவில் பொழுதை கழித்து செல்லலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- மாவட்ட வன அலுவலர் தகவல்
- அழகான நீர்வீழ்ச்சி உள்ளது
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரி, குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.
அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்கா லங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலை யேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்போது போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படு கின்றன.
ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.
இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, பைக்குகளுக்கு ரூ.25, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமும், சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.50, தங்கும் அறைக்கு பெரியோர்களுக்கு ரூ.250 குழந்தைகளுக்கு ரூ.100 என கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.
மேலும் இந்த கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்ததாக மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்தார்.
- ரூ.90 ஆயிரம் வசூலானது
- வனச்சரக அலுவலர் தகவல்
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா.
ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்த அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.
அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாள்களும், பூங்கா திறந்திருக்கும்.
இந்நிலையில் விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையொட்டி பூங்கா திறந்திருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர்.
கடந்த 21-ந் தேதி 344 பார்வையாளர்களும், அன்றைய தினம் ரூ.12,610-ம், 22-ந் தேதி 791 பார்வையாளர்களும், ரூ.28,110-ம், 23-ந் தேதி 845 பார்வையாளர்களும், ரூ.29,350-ம், நேற்று 752 பார்வையாளர்களும், ரூ. 26,020 என மொத்தம் கடந்த 4 நாட்களில் 2,732 பார்வையாளர்களும், அதன்மூலம் ரூ.96 ஆயிரத்து 90 ரூபாய் வசூலாகி உள்ளதாக அமிர்தி வனச்சரக அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
- கோவை உயிரியல் பூங்கா கொண்டுவரப்பட்டது
- ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்பட்டன
வேலுார்:
கோவை வ.உ.சி. மைதானம் அருகில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. அங்கு முதலை, புள்ளிமான், குரங்கு, கிளி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டன.
அந்த பூங்காவை கோவை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உயிரினங்களை பார்த்து ரசித்து சென்றனர்.
இந்நிலையில், பூங்காவை பராமரிக்க போதிய இடவசதி இல்லை எனக் கூறி, பூங்காவுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்துசெய்தது.
அதன்பிறகு பூங்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த உயிரினங்கள் வேறு பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து 2 முதலை, 3 நட்சத்திர ஆமை, 4 சாரைப்பாம்பு ஆகிய 9 உயிரினங்கள், சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் மூலமாக, மினிவேனில் எடுத்துவந்து, வேலுார் மாவட்டம் அமிர்தி சிறு வனஉயிரின பூங்காவில் வனச்சரகர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்ப ட்டன.






