search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
    X

    டி.ஐ.ஜி. முத்துசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற காட்சி.

    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

    • டி.ஐ.ஜி.யிடம் மனு
    • பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

    பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்க ளுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

    திருவலம் அருகே அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி (வயது 42) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடத்திற்க்கு முன் இறந்துவிட்டார்.

    என்னுடைய மகன் கராத்தே பயிற்சிக்கு அம்முண்டியில் சந்தை அருகே சென்றார்.அப்போது ஆற்காடு அருகில் உள்ள சாத்தூர் கிராமத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர்கள் 2 பேரிடம் கராத்தே பயிற்சி மைய விரிவாக்கத்திற்காக ரூ6.75,000 கடனாக கொடுத்தேன்.

    அவர்கள் கடந்த ஜூன் மாதம் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். பின்பு மீதமுள்ள தொகையை கேட்கும் போது என்னை அலைக்கழித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாது என்கின்றனர்.

    என்னுடைய பணம் ரூ5,75,000 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருவலம் அருகே உள்ள சீக்கராஜபுரத்தை சேர்ந்த அசோக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017-ம் ஆண்டு காட்பாடியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை.

    அந்த பணத்தை எனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே அந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.

    வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது பேத்திக்கு 5 வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறுமி அவரது உறவினர் வீடடுக்கு சென்றார்.

    அப்போது உறவினர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    Next Story
    ×