search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து
    X

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து

    • பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம்
    • விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பாலூர், மசிகம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது.

    பக்காலபள்ளி என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிக்கெட்டு ஓடி சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சத்யா, சக்தி,நதியா, ஆட்டோ டிரைவர் சரத்குமார், ராணி, மல்லிகா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி நேரங்களில் விதிகளை மீறி ஆட்டோவில் அதிக அளவில் பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் ஏற்றி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×