search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல்
    X

    அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல்

    • பேரணாம்பட்டு அருகே சாலை வசதி கேட்டு போராட்டம்
    • பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு பேரணாம்பட்டு நகரத்திற்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் இந்த கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

    பலமுறை சாலை அமைத்து தர கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×