என் மலர்
வேலூர்
- தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டினார்
- வனத்துறையினர் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், கல்லுட்டை 13-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த தேவி என்ற பெண் கவுன்சிலர் உள்ளார்.
இவரது கணவர் சிவகுமார்(50). இவர் அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், பெண் கவுன்சிலர் தேவியின் கணவன் சிவகுமார் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று தன் நிலத்தில் உள்ளது என்று நினைத்து வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட தைல மரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றார்.
இதுகுறித்து, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்தை கைப்பற்றினர்.
இதற்கிடையே, சிவகுமார் வனத்துறையினர் வருவதையறிந்ததும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனத்து றையினர் தலைமறைவாக உள்ள சிவகுமாரை தேடி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
- தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
பின்னர் அங்கு இருந்த 20 லிட்டர் சாராய பொட்டலங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய எல்லுப்பாறை மலைகிராமத்தை சேர்ந்த சிவா என்பவரை தேடி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி.யிடம் மனு
- பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்க ளுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
திருவலம் அருகே அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி (வயது 42) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடத்திற்க்கு முன் இறந்துவிட்டார்.
என்னுடைய மகன் கராத்தே பயிற்சிக்கு அம்முண்டியில் சந்தை அருகே சென்றார்.அப்போது ஆற்காடு அருகில் உள்ள சாத்தூர் கிராமத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர்கள் 2 பேரிடம் கராத்தே பயிற்சி மைய விரிவாக்கத்திற்காக ரூ6.75,000 கடனாக கொடுத்தேன்.
அவர்கள் கடந்த ஜூன் மாதம் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். பின்பு மீதமுள்ள தொகையை கேட்கும் போது என்னை அலைக்கழித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாது என்கின்றனர்.
என்னுடைய பணம் ரூ5,75,000 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருவலம் அருகே உள்ள சீக்கராஜபுரத்தை சேர்ந்த அசோக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனக்கு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017-ம் ஆண்டு காட்பாடியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை.
அந்த பணத்தை எனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே அந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.
வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனது பேத்திக்கு 5 வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறுமி அவரது உறவினர் வீடடுக்கு சென்றார்.
அப்போது உறவினர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- பேரணாம்பட்டு அருகே சாலை வசதி கேட்டு போராட்டம்
- பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு பேரணாம்பட்டு நகரத்திற்கு சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
பலமுறை சாலை அமைத்து தர கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரூ.90 ஆயிரம் வசூலானது
- வனச்சரக அலுவலர் தகவல்
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா.
ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்த அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.
அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாள்களும், பூங்கா திறந்திருக்கும்.
இந்நிலையில் விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையொட்டி பூங்கா திறந்திருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர்.
கடந்த 21-ந் தேதி 344 பார்வையாளர்களும், அன்றைய தினம் ரூ.12,610-ம், 22-ந் தேதி 791 பார்வையாளர்களும், ரூ.28,110-ம், 23-ந் தேதி 845 பார்வையாளர்களும், ரூ.29,350-ம், நேற்று 752 பார்வையாளர்களும், ரூ. 26,020 என மொத்தம் கடந்த 4 நாட்களில் 2,732 பார்வையாளர்களும், அதன்மூலம் ரூ.96 ஆயிரத்து 90 ரூபாய் வசூலாகி உள்ளதாக அமிர்தி வனச்சரக அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- 300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியாகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவராஜபாளையம், காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான முள் கத்திரிக்காய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
அதிக சுவை கொண்ட இந்த முள் கத்தரிக்காயை பல்வேறு தரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
முள் கத்திரிக்காயில் புரதம், வைட்டமின்-சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்களும் மிகுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 300 ஹெக்டேர் பரப்பளவில் முள் கத்திரிக்காய் சாகுபடியாகிறது.
45 முதல் 60 நாளில் மகசூலுக்கு தயாராகும் இந்த முள் கத்திரிக்காய் செடியில் தொடர்ந்து 5 மாதங்கள் வரை மகசூல் பெற முடியும். இதன்மூலம், ஓர் ஏக்கருக்கு 16 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் முள் கத்திரிக்காய் சாகுபடியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வறட்சி, நோய்களை தாங்கி விளையக்கூடிய இந்த முள் கத்தரியில் சாம்பார், பொரியல், தொக்கு, வற்றல் உள்ளிட்டவற்றை சமைக்க முடியும். முள் கத்தரிக்காய் பஜ்ஜியின் சுவையும் அதிகம்.
அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட முள் கத்தரி வகையில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இலவம்பாடி முள் கத்திரியின் நிறம், சுவை, எடை உள்ளிட்டவை தனி ரகம் என்றே கூறலாம். வேறு எந்த மாவட்டத்திலும் இலவம்பாடி முள் கத்திரிக்காய் விளைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு வட்டத்தில் இலவம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் பெரியளவில் விளைவிக்கப்படுகிறது.
அந்த வகையில் தனிச்சிறப்பு கொண்ட இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. சென்னை கோயம்பேடு, பெங்களூரு உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு மிகுநத வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலங்க ளுக்கு ஏற்றுமதி புவிசார் கிடைத்த பிறகு வியாபாரிகள் சிலர் கிராமத்துக்கே நேரடியாக வந்து முள்கத்திரிக்காய்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், விவசாயி களுக்கு கூடுதல் செலவும், நேரமும் மிச்சமாகிறது. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு அதிக ரித்துள்ள மவுசு காரணமாக சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து இலவம்பாடி முள் கத்திரிக்காய் அண்டை மாநிலங்களுக்கும்வி ற்பனைக்காக அனுப்பப்படு கின்றன. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருப்பதால் அதுகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.
கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி பயிற்சி அளித்தாலும் நல்லதுதான். விவசா யிகளுக்கும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது" என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஒருவர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
அணைக்கட்டு:
வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 50) என்பதும், இவர் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது.
- மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.
இதனால் கீழே விழுந்த குரங்கிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாயில் தனது வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளையும் வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார். இதனையடுத்து குரங்கு உயிர் பிழைத்து அங்கிருந்து சென்றது.
மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்
- பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது
வேலூர்:
2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டியலில் பெயர், சேர்ப்பு, நீக்கல் தொடர்பான சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.
வேலூர் மாவட்டத்தி ற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க வசதியாக, நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் அடங்கிய பட்டியல், தேர்தல் ஆணையத்தில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொகுதி வாரியாக ஒவ்வொரு பக்கமும் மீண்டும் சரிபார்க்கப்படும்.
இதில் திருத்தம் இருப்பின், வருகிற 27-ந் தேதி நடக்கும் சுருக்கத்திருத்த பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சரிபார்ப்பு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் 5 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
- நவராத்திரி பூஜை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
காட்பாடி கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம், காமாட்சி அம்மன் சமேத மகாதேவ மலை கோவிலில் நவராத்திரி பூஜை முன்னிட்டு, மகா யாகம் நடந்தது.
இதையொட்டி மகா தேவமலை சாமி, காமாட்சி அம்மன், விநாயகர், குருதட்சணா மூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சாமி சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூஜையை மகானந்த சித்தர் தொடங்கி வைத்தார்.
கடந்த 14-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த யாகம் தொடர்ந்து நடந்து வருகிறது.
யாக பூஜையில் அமைச்சர் துரைமுருகன், துரை சிங்காரம், மகானந்த சித்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் பாஸ்கர், தொழில் அதிபர்கள் ஸ்ரீராம், அனு ரெட்டி, வக்கீல் முனிசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பைக் 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது
- தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்
வேலூர்:
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற ரோகித்ராஜ் (வயது 19). 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் விடுதலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு நண்பர்களை பார்ப்பத ற்காக வேலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வரும்போது அந்தவழியாக வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ரோகித்ராஜ் ஓட்டிச் சென்ற பைக், அங்குள்ள 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ரோகி த்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளம்பர பலகை மாட்டியபோது பரிதாபம்
- பெங்களூருவை சேர்ந்தவர்கள்
வேலூர்:
கர்நாடக மாநிலம் ெங்களூரு டேனி ரோட்டை சேர்ந்தவர்கள் சலீம் (வயது 22). கவுஷிக் (25). இவர்கள் இருவரும் பிரபல தனியார் ஆயில் நிறுவனத்தின் விளம்பர பலகை பொருத்துவது சம்பந்தமாக டெண்டர் எடுத்து வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் ராணிப்பேட்டை ஆற்காடு வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆயில் விற்பனை செய்யும் கடைகளில் மாட்டப்பட்டு இருந்த பழைய விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு புதிய விளம்பர பலகைகளை பொருத்தினர்.
ஊசூரை சேர்ந்த சரவணன் என்பவர் குளத்து மேடு பகுதியில் ஆயில் மற்றும் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சலீம், கவுஷிக் இருவரும் சென்றனர்.
அப்போது கடையின் உரிமையாளர் சென்னைக்கு சென்று இருந்தார்.இதையடுத்து 3-வது மாடிக்குச் சென்ற இருவரும் அங்கு புதிய விளம்பர பலகையை பொருத்தம் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் விளம்பரப் பலகை உரசியது.
இதில் 2 வாலிபர்கள் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






