search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
    X

    பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×