search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager was killed"

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே காதர்பேட்டை கவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகன் அம்ஜத் பாஷா (வயது 29) இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அம்ஜத் பாஷா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ஜத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஆம்பூரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 24) இவரது நண்பர்களான விக்னேஷ் (23) ராம்குமார் (28) ஆகியோர். வேலூரில் இருந்து கலைச்செல்வனை ஆம்பூரில் விடுவதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.

    வெட்டுவானம் அடுத்த சின்னகோவிந்தம்பாடி அருகே வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்க சக்கரத்தில் கலைச்செல்வன் சிக்கினார்.

    பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வன் இறந்தார்.

    தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ராம்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பள்ளிகொண்டா போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வெம்பாக்கம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது லத்திப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அங்குள்ள பழைய கட்டிடத்தில் முகமது லத்திப் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திடீரென பழைய கட்டிடத்தின் சுவர் முகமது லத்திப்பின் தலையில் விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது லத்திப் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 35).

    இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் பனப்பாக்கம் சென்றார்.

    ஓச்சேரி-அரக்கோணம் ரோடு நங்கமங்கலம் கிராம் அருகே வரும்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தடுப்புச் சுவரில் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் டிஎக்ஸ்ஆர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு இவரது மகன் அரவிந்த் (வயது 27).

    இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 1 ½ வருடங்களுக்கு முன்பு ஆனந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

    அரவிந்த் கடந்த சனிக்கிழமை தனது குழந்தைக்கு குலம் தெய்வம் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக விடுமு றையில் வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு சென்று சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சின்ன பொன்னேரி சுடுகாட்டு அருகே உள்ள சிறிய மேம்பாலம் தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கோனாரின் ராயன் குளக்கரை ஒட்டி உள்ள கிடங்கு தெரு பகு தியை சேர்ந்தவர் முத்து (வயது 25.

    இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள புளிரம்பாக் கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி நீரில் இறங்கினார். சிறிது தூரம் சென்ற அவர் கால் தவறி சேற்றில் சிக்கி மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர் செய்யாறு தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். சேற்றில் சிக்கிய முத்துவை சுமார் 2 மணி நேரமாக தேடினர்.

    இருள் சூழ்ந்ததாலும் போதியம் வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி கைவிடப்பட்டது.

    மீண்டும் இன்று காலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு முத்துவை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரமேத்குமார் (வயது 25). இவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு தனது பைக்கில் சென்றார்.

    அகரம்சேரி அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரமேத்குமார் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை பைக்கில் கட்டி 10 கி.மீ தூரம் தூக்கி ெசன்றார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சாலைவேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). விவசாயி. இவர் தனது நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.

    முயல் வேட்டை

    வயலில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள இருளர் காலணியை சேர்ந்தவர் சக்திவேல் (18) என்பவர் தனது 17 வயது நண்பனுடன் முயல் மற்றும் எலிகளை வேட்டையாடுவதற்காக வயலுக்கு சென்றார்.

    நள்ளிரவு மின் வேலி ஒயர் இருப்பதை அறியாமல் சக்திவேல் அதனை மிதித்தார். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவனுடன் சென்ற சிறுவன் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏழுமலை சென்றபோது மின்வெளியில் சிக்கி சக்திவேல் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை மறைப்பதற்காக சக்திவேலின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவில் எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் பகுதிக்கு பைக்கில் சென்றார். அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு திரும்பி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து சிறுவன், சக்திவேல் பெற்றோரிடம் நேற்று காலை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஏழுமலையிடம் விசாரணை நடத்தியபோது சக்திவேலின் உடலை ராமாபுரம் காட்டில் கொண்டு போய் வீசியதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேம்பால தடுப்புச்சுவரில் மோதி விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் அடுத்த ஈ.பி. ஆபீஸ் திருமால் நகர் பகு தியை சேர்ந்தவர் செல்வதாஸ் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 27), பெயிண்டர். இவரது மனைவி ரேகா.

    இந்த நிலையில் சந்தோஷ் தனது மாமியார் வீடான பாச்சல் ஜெய்பீம் நகருக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார்.

    பாச்சல் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர், பின்னர் மேல் சிகிச் சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 20) ஏ.சி.மெக்கானிகாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர் மாணிக்கம்(21) வெல்டராக வேலைசெய்து வருகிறர்.

    இந்த நிலையில் இரவு 2 பேரும் வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும். பைக்கில் வாலாஜா நோக்கி வந்தனர்.

    இதில் யுவராஜ் ைபக்கை ஓட்டி வந்துள்ளார். அப்போது புலித்தாங்கல் பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பைக் சாலை தடுப்பில் மோதியது.

    இதில் தூக்கி எறியப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னால் அமர்ந்து வந்ததில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ×