search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    • ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ஆசனம்பட்டு ரோடு நியூ பெத்தலேகியம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 29) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது பைக்கில் ஆம்பூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    இப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஸ்ரீராம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×