search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் வாலிபர் பலி
    X

    விபத்தில் வாலிபர் பலி

    • திடீரென அமைத்த வேகத்தடையால் விபரீதம்
    • பொதுமக்கள் சாலை மறியல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் லக்கி நாயக்கன்பட்டி அருகே பாலம் வேலை நடைபெறுகிறது. இதனால் அந்த இடத்தில் நேற்று இரவு திடீெரன வேகத்தடை அமைத்தனர். இதையறியாத வாகன ஓட்டிகள் வேகத்தடையில் விபத்தில் சிக்கினர்.

    காக்கங்கரை அருகே மேற்கு பதனவாடி என்ற ஊரைச் சேர்ந்த சூர்யா (வயது 22). லாரி டிரைவர். இரவு 9 மணிக்கு மேற்கு பதனவாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    லக்கி நாயக்கன்பட்டியில் வேகத்தடைய கவனிக்காமல் சென்ற சூர்யா தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை அறிந்த அவரது தாய் சிவகாமி விபத்து நடந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரும் தடுப்பில் மோதி காயம் அடைந்தார்.

    போலீசார் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்த சிவகாமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இதனையடுத்து திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

    இந்த விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×