என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த வாலிபர் உடல்.
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் பலி
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே எதிரேயுள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அப்பகுதி பொது மக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலா ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக வரும் போது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்க லாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






