என் மலர்
வேலூர்
- உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித் தள்ளுவதால் காயமடைந்து வருகின்றனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் இன்று மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ 1000 அபராதமும், 3 மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், மாநகர சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகள் கோ சாலையில் ஒப்படை க்கப்படும். அபராத தொகை கட்டியவுடன் மாடுகள் விடுவிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் யாரும் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது.
இனி சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்ணாம்பட்டு கோவிலை சீரமைக்க கோரிக்கை
- மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கார்ணாம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவிலில் பூஜை நடத்தி வருகின்றனர். கோவிலை சீரமைக்க வேண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலை சீரமைக்க வலியுறுத்தி கார்ணாம்பட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமன் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கோட்டதலைவர் மகேஷ் கூறியதாவது:-
கைலாசநாதர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கற்கோவில் ஆகும். இந்து சமய அறநிலையத்துறை முறையாக பாதுகாக்க வில்லை.
கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இருப்பினும் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்த கூட இந்து சமய அறநிலைத்துறை முயற்சிக்கவில்லை.
சிவ பக்தர்கள் நாள்தோறும் வழிபாடு நடத்துகின்றனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நிதி ஒதுக்கியதாக கூறினர்.
ஆனால் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கோவிலை சீரமைக்க உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
- ஜனவரி மாதம் 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி களில் 6 லட்சத்தி 8639 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 48 ஆயிரத்து 515 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 162 பேர் என மொத்தம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 1303 வாக்குச்சாவடிகள் 656 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகங்கள், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
பொதுமக்கள் இன்று முதல் வருகிற 9, 12, 23-ம் தேதி வரை படிவம் 6, 6 பி, 7,8, ஆகியவற்றில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
பொதுமக்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்,ய திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வழங்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளிலும் 18 மற்றும் 19-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் உடனடியாக படிவம் 6 பி- ல் ஆதார் விவரத்தினை பதிவு செய்து வழங்கலாம்.
இந்த சுருக்க திருத்த பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்ட மன்ற தொகுதியின் எண் மற்றும் பெயர் வருமாறு:-
காட்பாடி: ஆண்-116383, பெண்-124750, மூன்றாம் பாலினம்-34, மொத்தம்-241167
வேலூர்: ஆண்-117441, பெண்-126691, மூன்றாம் பாலினம்-44, மொத்தம்-244176
அணைக்கட்டு: ஆண்-122842, பெண்-130334, மூன்றாம் பாலினம்-33, மொத்தம்-244176
கே.வி.குப்பம் (தனி): ஆண்-111478, பெண்-116402, மூன்றாம் பாலினம்-8, மொத்தம்-227888
குடியாத்தம் (தனி): ஆண்-140495, பெண்-150338, மூன்றாம் பாலினம்-43, மொத்தம்-290876
மொத்த ஆண்கள்-608639, பெண்கள்-648515, மூன்றாம் பாலினம்-162, மொத்தம்-1257316
- பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னத்துரை காளியம்மன் கோவில் எதிரே தனியார் பஸ் ஒன்று ஒடுகத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ்சை முந்தி செல்வதற்காக விஜயகாந்த் முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி பஸ்சின் அடியில் பைக் சிக்கிதால் தவறி கீழே விழுந்ததில் விஜயகாந்த் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தனியார் பஸ் டிரைவர் வேப்பங்குப்பம் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் நடக்கிறது
- ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் 800 ஆண்டுகள் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. கெங்கையம்மனிடம் ஊரை காக்கும் தெய்வமாக பக்தியுடன் வேண்டி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
உள்ளூர், வெளியூர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அம்மனை தரிசிக்க தவறாமல் இங்கு வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி இலக்கிய விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 39-வது விஜயதசமி இலக்கிய விழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
இதில் தினமும் மாலை 4 மணிக்கு முதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அடுத்த நிகழ்ச்சியும் நடைபெறும். இலக்கிய விழாக்களுக்கு சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக்குழு தலைவருமான எஸ்.எம்.சுந்தரம், செயலாளர் உலகநாதன், பொருளாளர் ஜெ.ஞானசேகரன், சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ்.சுகுமார், பொருளாளர் மார்க்கபந்து மற்றும் நகராட்சி முன்னாள் தலைவர் ஜி.முருகன், முன்னாள் துணைத்தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை வேலூர் முன்னாள் எம். எல்.ஏ.சி.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.
விழாவில் 'தெய்வம் நீ என்றும் உணர்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரின் தனி உரை நிகழ்ச்சியும், 'வாழ்வில் நிம்மதியும் மகிழ்வும் தருவது கனிந்த மனமே- நிறைந்த பணமே' என்ற தலைப்பில் கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் சிந்தனை பட்டிமன்றமும், 'அன்பே தவம்' என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் சொற்பொழிவும், டெலிவிஷன் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் மக்கள் இசை தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும், 'வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பில் தொலைக்காட்சி புகழ் அருள் பிரகாசத்தின் தனி உரையும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் கவிஞர் அரு.நாகப்பனின் நிலையான பயனும் மகிழ்ச்சியும் அளிக் கும் பாடல்கள் எது? என்ற தலைப்பில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகு மார்,ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர்கள் ஆர்.பி.ஏழுமலை, சுமதி மனோகரன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த சமுதாய மரபினர் மற்றும் விஜயதசமி இலக்கிய விழா குழு தலைவர் எஸ்.எம். சுந்தரம் உள்ளிட்ட விழா குழு வினர் செய்துள்ளனர்.
- 30 பேர் கைது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மல்லிகா வரவேற்றி பேசினார். சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.
தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 அகவிலை படியுடன் சேர்த்து வழங்க வேண்டும் 10 வருடம் பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் முருகேசன் மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசார் அனுமதி இல்லா ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 2 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சமும், .இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக ளுக்கான ஈமச்சடங்கு தொகை ரூ.17 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பாதிக் கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ரித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் டெங்கு பாதிப்புக்குள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காய்ச்சல் வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இந்த நிலை யில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கொசப்பேட்டை யில் நேற்று ஒருவர் உட்பட 4 பேர் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் குடியாத்தத்தில், 22 வயது மற்றும் 25 வயது கொண்ட ஆண்கள் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெற்றது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன.
இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ.7.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம்
- விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பாலூர், மசிகம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது.
பக்காலபள்ளி என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிக்கெட்டு ஓடி சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சத்யா, சக்தி,நதியா, ஆட்டோ டிரைவர் சரத்குமார், ராணி, மல்லிகா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நேரங்களில் விதிகளை மீறி ஆட்டோவில் அதிக அளவில் பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் ஏற்றி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






