என் மலர்
வேலூர்
- கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே அட்டகாசம்
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் மது பாட்டிலுடன் வந்த ஒருவர் குடி யாத்தம் காட் பாடி தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்தார்.
பின் னர் தான் கொண்டு வந்த மது பாட்டிலை திறந்து அதை 3 முறை தொட்டுத் தொட்டு கும்பிட்டார்.
தொடர்ந்து அங்கேயே மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை ரோட்டில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
இது சமூக வலைதளங் களில் வைரலானது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டை பாராக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமர்ந்து மது அருந்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கே.வி. குப்பம் சீதாராம்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் (வயது 64) என்பது தெரிந்தது.
அவர் மீது கே.வி. குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
- கிராம மக்கள் அச்சம்; விடிய விடிய ரோந்து
- துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு வனப்ப குதியில் ஒற்றை யானை புகுந்தது.
ஒடுகத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு, கல்லாபாறை, குறவன் கொட்டாய், தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டி சென்றனர்.
அப்போது ஒற்றை கொம்பன் யானை சுற்றி திரிவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரின் ஆங்காங்கே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது விவசாய நிலங்களில் ஒற்றை கொம்பன் யானை சுற்றி வலம் வருவதால் நேற்று இரவு முதல் வனத்துறையினரின் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானையின் நடமாட்டத்தால் ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வயது முதிர்ந்து காணப்படும் இந்த யானையை யாரும் இடையூறு செய்யக்கூடாது. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது.
விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தினால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஜவ்வாது மலை தொடரை பூர்வீகமாக கொண்டு ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறது.
அந்த யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் யானையே துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்
- சமுதாயக்கூடம் கட்டித் தர கோரிக்கை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது காட்பாடி அருகே பெரியபட்டரையைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை, போர்வெல் பழுதடைந்து 1மாதம் ஆகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதி பொதுமக்களுக்காக 1993-ம் ஆண்டு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பொது காரியங்கள் செய்வதற்கான மண்டபம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த இடத்தில் ஒரு சிலர் தவறான அணுகுமுறையில் பட்டா பெறப்பட்டு அங்கே குடியேறி வீடு கட்டி உள்ளனர்,
எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடத்தையும் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பொது உபயோக இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு காரியமண்டபம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எல்லை பாதுகாப்பு படை வீரர் சாலை விபத்தில் பலி
- உடல் அடக்கம் செய்யப்பட்டது
வேலூர்:
வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 41). இவர் கர்நாடகாவில் உள்ள எஸ்.டி.சி பட்டாலியனில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சாலை விபத்தில் இறந்தார்.
இதையடுத்து சுதாகர் உடல் நேற்று அலமேலு மங்காபுரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மயானத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து சுதாகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- பணி சுமையால் விபரீதம்
- விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டு வர ஏற்பாடு
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). இவர் சத்தீஸ்கர் மாநில 19-வது பட்டாலியனில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி வசந்தா. தம்பதியின் மகள் சுஷ்மா (டாக்டர்), மகன் ஜஸ்வந்த் (என்ஜினியர்) உள்ளனர்.
இந்த நிலையில் குணசேகரன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருந்த போது துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப ட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குணசேகரன் உடலை விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு அரசு மரியாதை யுடன் குணசேகரன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. முதற்கட்ட விசார ணையில் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- அமைச்சர் துரைமுருகன் பேட்டி
- ஏரி புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி ஆய்வு
வேலூர்:
காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.
பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.
இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.
தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவர் தனது வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை
- உழைப்பை சுரண்டும் கும்பல் மீது நடவடிக்கை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 27).
இவர் காட்டன் சூதாடியபோது போலீசார் மடக்கிபிடித்தனர். இதனையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தார்சாலை அமைக்கும் பணியில் தொய்வு
- அல்லேரி மலை கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் ஒன்றரை வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர். அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கெலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு காகிதப்பட்டறை மலையில் இடத்தினை வழங்கினர்.
இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.
கடந்த 6 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலையில், பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார்.
- காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.
பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.
இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.
தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.
- விடுதிகள், கடைகள் போன்ற இடங்களில் சோதனை செய்தனர்
- போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை
வேலூர்:
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு அசாம், ஒடிசா, மேற்குவங்காளம், கொல்கத்தா, பீகார், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். பலர் மாதக்கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுதவிர தொழில் நிமித்தமாகவும் ஏராளமானவர்கள் வேலூரில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வேலூரில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி வேலூரில் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து இந்த பணியை மேற்கொண்டனர்.
கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி வரை ஆய்வு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.தங்கும் விடுதிகள், கடைகள் போன்ற இடங்களுக்கு அவர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உண்மையான முகவரியா?, முகவரி மாற்றம் செய் தவர்களில் யாராவது போலி யாக முகவரி மாற்றம் செய் துள்ளார்களா? என்ற விவரங் கள் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, போலியான முகவரிகளை கொடுத்து தங்கி உள்ளார்களா?, ஆதார் அட்டையில் போலி முகவரி மாற்றம் செய்துள்ளனரா? என்பது ஆய்வு செய்தோம். இதுவரை சுமார் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரை ஆய்வு செய்துள்ளோம். இதில் போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
- ஆயுத பூஜைக்கு அழைக்காததால் ஆத்திரம்
- ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் வள்ளலார் பூங்கா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் இந்து முன்னணி சார்பில் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜை போடுவதற்காகவும் பெயர் திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்.
அப்போது அங்கு வந்த சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மதன் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகியோர் நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னை ஏன் ஆயுத பூஜைக்கு கூப்பிடவில்லை என தகராறு செய்து சந்திரசேகரை தாக்கி உள்ளனர்.
மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பினர். இது குறித்து சந்திரசேகர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






