என் மலர்
வேலூர்
- பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை
- உழைப்பை சுரண்டும் கும்பல் மீது நடவடிக்கை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 27).
இவர் காட்டன் சூதாடியபோது போலீசார் மடக்கிபிடித்தனர். இதனையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தார்சாலை அமைக்கும் பணியில் தொய்வு
- அல்லேரி மலை கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் ஒன்றரை வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர். அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கெலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு காகிதப்பட்டறை மலையில் இடத்தினை வழங்கினர்.
இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.
கடந்த 6 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலையில், பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார்.
- காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.
பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.
இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.
தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.
- விடுதிகள், கடைகள் போன்ற இடங்களில் சோதனை செய்தனர்
- போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை
வேலூர்:
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு அசாம், ஒடிசா, மேற்குவங்காளம், கொல்கத்தா, பீகார், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். பலர் மாதக்கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுதவிர தொழில் நிமித்தமாகவும் ஏராளமானவர்கள் வேலூரில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வேலூரில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி வேலூரில் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து இந்த பணியை மேற்கொண்டனர்.
கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி வரை ஆய்வு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.தங்கும் விடுதிகள், கடைகள் போன்ற இடங்களுக்கு அவர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உண்மையான முகவரியா?, முகவரி மாற்றம் செய் தவர்களில் யாராவது போலி யாக முகவரி மாற்றம் செய் துள்ளார்களா? என்ற விவரங் கள் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, போலியான முகவரிகளை கொடுத்து தங்கி உள்ளார்களா?, ஆதார் அட்டையில் போலி முகவரி மாற்றம் செய்துள்ளனரா? என்பது ஆய்வு செய்தோம். இதுவரை சுமார் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரை ஆய்வு செய்துள்ளோம். இதில் போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
- ஆயுத பூஜைக்கு அழைக்காததால் ஆத்திரம்
- ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் வள்ளலார் பூங்கா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் இந்து முன்னணி சார்பில் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜை போடுவதற்காகவும் பெயர் திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்.
அப்போது அங்கு வந்த சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மதன் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகியோர் நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னை ஏன் ஆயுத பூஜைக்கு கூப்பிடவில்லை என தகராறு செய்து சந்திரசேகரை தாக்கி உள்ளனர்.
மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பினர். இது குறித்து சந்திரசேகர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்
- இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் 39-ம் ஆண்டு விஜயதசமி இலக்கிய விழா நேற்று தொடங்கி இன்று மாலை பாட்டு பட்டிமன்றத்துடன் நிறைவடைகிறது.
முதல் நாளான நேற்று மாலை மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் மக்களிசைக்குழுவினரின் நாட்டுப்புற, தெம்மாங்கு பாடல், இசை நிகழ்ச்சி நடந்தது.
கெங்கையம்மன் கோவில் திடலில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு விஜயதசமி இலக்கிய விழாக்குழு செயலாளரும், ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் திருஅருள் குழும நிறுவன ருமான உலகநாதன் தலைமை தாங்கினார்.
சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக் குழு தலைவரும், எஸ்.எம் எஸ் கிராண்ட் ஒட்டல் இன் உரிமையாளருமான எஸ். எம்.சுந்தரம் வரவேற்றார்.
சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி பொருளாளர் டி.எம். மார்கபந்து, சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ். சுகுமார், விஜயதசமி இலக்கிய விழாக்குழு பொருளாளர் ஞானசேகரன், எஸ்.எம்.எஸ். கணேசன், யு.அருளரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ,ஞான சேகரன், மாநகர மேயர் சுஜாதா, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சுமதி, அருணோதயம், வேலூர் மேற்கு மாவட்ட தெ.செ.ம.சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் என். பாலாஜி கலந்து கொண்டு மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் நடந்த நாட்டுப்புற, தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் செந்தில்கணேஷ், பின்னணி பாடகி ராஜலெட்சுமி குழுவினர் நாட்டுப்புற பக்தி பாடல்களையும், நாட்டுப்புற, தெம் மாங்கு பாடல்களையும் அசத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் இதில் தத்ரூபமாக அம்மன், முருகன், விநாயகர் உருவம் தாங்கியவர்கள் பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் விஜயதசமி இலக்கிய விழாக்குழு மற்றும் செங்குந்த சமுதாய கமிட்டியினர் செய்திருந்தனர். இலக்கிய விழாவில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பிரபல மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் தலைமையில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 24), டெய்லர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விஜய் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விஜய் தாயார் குணாவதி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
- டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு குறுகிய சாலைகளும் ஒரு காரணமாக அமைகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலூர் பழைய பைபாஸ் சாலை ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் பழைய பைபாஸ் சாலையை அகலப்படுத்த ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
- சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது
- தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, டெல்லி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம், உருளை உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வந்து மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி சில வாரங்களுக்கு முன்பு விலை அதிகமாக இருந்தது. இந்த விலை உயர்வால் குடும்ப தலைவிகள் கவலையடைந்தனர். அதன் காரணமாக தக்காளியை ரேசன்கடைகளில் மலிவு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இது குடும்ப தலைவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது விலை உயர்ந்து ரூ.65 முதல் ரூ.70 வரை தரத்துக்கு ஏற்ற வகையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில்:-
தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து இருந்தது. தற்போது விலை குறைய தொடங்கி உள்ளது. எனினும் வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், கத்தரிக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருந்து சற்று கூடுதல் விலைக்கு சில்லறை விலையில் வியாபாரிகள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூரை அடுத்த செதுவாலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்கமுயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி, சாவடி தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 70). இவரது மனைவிக்கு பித்தப்பை பிரச்சினை சம்பந்தமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கருணாமூர்த்தி கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ள கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
அவரது உறவினர்கள் கருணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்பாடி ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு
- புகைப்ப டங்களை காட்டி விளக்கினர்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது ரெயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து தண்டவாள பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரெயில்வே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார்.
அதன் பேரில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, வசந்தி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்மராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளிக்குப்பம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் ரெயில் தண்டவா ளங்களை கடந்த போது அடிபட்டு இறந்தவர்கள் புகைப்ப டங்களை காட்டி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அருகாமையில் உள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் தெரியாமல் ஆடு மாடுகளை தண்டவா ளப்பாதையில் மேய்ப்பது குற்றம்.
தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக குழந்தைகள் கற்களை வைப்பது குற்றம் என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






