என் மலர்tooltip icon

    வேலூர்

    • கிராம சபை கூட்டம் நடந்தது
    • ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்ப ங்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமை தாங்கினார். ஊராட்சியில் தொடர்ந்து ஓய்வின்றி பணி யாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுர விக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் பணியாற்ற அவர்களுக்கு முன்னெச்ச ரிக்கை உபகரண பொ ருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் வேப்பங்குப்பம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
    • வேலூர் கோட்டை அகழியில் பிணமாக மீட்பு

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது.

    அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.

    ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை என்று கூறப்ப டுகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் குறித்து கண்டறிய வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கொலை செய்து வீசப்பட்ட வாலிபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில் அவர் ஆந்திரா அல்லது கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த 2 மாநிலங்களிலும் காணாமல் போன 10 ஆயிரம் வாலிபர்களுடைய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் மூலம் கொலையான வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் தற்கொலை மிரட்டல்-பரபரப்பு
    • அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோரங்களில் கடைகள் அமைத்து போக்கு வரத்துக்கு இடையூராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி 3-வது மண்டல கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் 2-வது மண்டல கட்டிட ஆய்வாளர் நிர்மலா தேவி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்ப ட்டிருந்த கடைகளை அகற்ற முயன்றனர்.

    அப்போது கடையின் பெண் உரிமையாளர் கடைகளை அகற்றினால் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொள்வதாக அதிகாரிகளை மிரட்டினார்.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அப்புறப்ப டுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
    • அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் கேட்டார்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார்.

    வேலப்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆசிரியராகப் பணியாற்றி 2012-ம் ஆண்டு ஒய்வு பெற்றேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என் மகனுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே தெரிவித்து என்னிடம் வந்து ரூ.15 லட்சம் கேட்டார். நானும் அந்த பணத்தை கடன் வாங்கி அளித்தேன்.

    தற்போது நான் கடன் தொல்லையாலும், அவர் வேலை வாங்கித் தராததாலும் குடும்பமே மன உளச்சலுக்கு ஆளானோம். அந்த நிலையில் நான் சம்மந்தப்பட்டவரிடம் சென்று பணம் கேட்டு அடிக்கடி செல்வதை, யார் மூலமாகவோ தெரிந்து கொண்ட மற்றொரு நபர் சம்பந்தப்பட்டவரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருகிறேன் என்று என்னிடம் கூறினார். அவ்வப்பொழுது என்னிடம் வந்து ரூ.5 லட்சம் பெற்றுச் சென்றார் அதன் பிறகு பணம் பெற்றுத் தரவில்லை, அதன் பிறகு உன் பணத்தை தரமுடியாது என்று கூறி தர மறுத்துவிட்டார். ரூ.20 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சீட்டு பணம்

    வள்ளிமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேல்பாடி, மதுரா சின்ன கீசக்குப்பம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைமையில் 35 பேர் ஏஜென்ட் இல்லாமல் சீட்டு ஆரம்பிக்கப்பட்டது. மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து 25 சீட்டுகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 10 பேருக்கு ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளது. சீட்டு முடிந்து ஒரு வருடம் ஆகிறது.

    இதனைக் கேட்டால் பணத்தை தர மறுக்கின்றனர்.எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இளம்பெண் புகார்

    கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் குடியாத்தம் நகரில் இயங்கி வரும் ஜவுளி கடையில் சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தேன்.

    அவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு மற்றும் தீய படிக்கவழக்கங்கள் உள்ளதால் அவரிடம் பேசுவதில்லை. அதன்பின் 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அடிக்கடி வழிமறித்து கேலி செய்தும் தொல்லை கொடுத்தும் வருகிறார்.

    உன் மகளுக்கு எப்படி திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது என என் பெற்றோரிடம் திட்டுகிறார். உரிய விசாரனை செய்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அறுந்து கிடந்த கம்பியை மிதித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர், முள்ளிபாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று கொண வட்டம் பைபாஸ் சாலை அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

    அந்த வழியாக சென்ற மதன் குமாரின் பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதில் பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்த கொணவட்டம் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மின்கம்பத்தின் மீது லாரி மோதியது குறித்து கொணவட்டம் மின்வாரிய பொறியாளர் தினேஷ்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதி சென்று திரும்பிய போது பெண் குழந்தை பிறந்தது
    • தாய், குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது
    • பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய ஊராட்சி விருது 2024-ம் ஆண்டிற்கு இணையதள தரவுகள் மூலம் விண்ணப்பிக்கவும், விவரங்களை பதிவேற்றம் செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணைய வழி மூலம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத வரி, வர்த்தக உரிமம் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊராட்சி சொத்துக்களை கண்கா ணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.
    • ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

    இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரேணூகாதேவி பெருமாள்ராஜா வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில், அனைத்து வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். தற்போது, அம்ரூத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி விட்டதால் கூடிய விரைவில் வீடு தோறும் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடையும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் வாசிக்கப்பட்டது.

    அப்போது, பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்ல கடும் நெருக்கடி நிலவி வருகிறது.

    பஸ் நிலையம் விரிவு படுத்துவதால் அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு களை உடனே அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    டெங்கு கொசுகள் அதிகம் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    15 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி தூய்மை பணிகளை தீவிரப டுத்தி டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன,

    அதேபோல், பழுதாகியுள்ள மின் மோட்டார்கள், தெரு விளக்குகளை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டது. 

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆப்ரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.30 கோடி ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ரூ.34.50 லட்சத்தில் ஈரக்கழிவுகள் செயலாக்க பணிகள் மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.18.50 லட்சத்தில் 18 வார்டுகளிலும் புதிய கல்வெட்டு அமைத்தல், 5 வார்டுகளில் புதிய போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பாக பொதுமக்கள் இடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடந்தது. இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையம்,வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக, இறுதியில் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    பேரணியில் வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் ,வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, வேலூர் உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தபால் நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 6-ந் தேதியும், ஜவகர்லால்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 7-ந் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி வேலூர் ஊரீசு கல்லூரியில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பு போட்டி அன்று வழங்கப்படும். எனவே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் மாணவர்கள் பேசுவதற்கு தயார் செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×