என் மலர்
வேலூர்
- ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பு
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
சென்னையை சேர்ந்தவர் தனானந்தகிரி (வயது 50). இவர் சாமியார் போன்று பல்வேறு இடங்களுக்கு செல்வார். கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் வந்த அவர் வேலூருக்கு வந்தார்.
கேரளமாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (50). இவரும் வேலூரில் சுற்றித்திரிந்து கிடைக்கும் வேலைகளை செய்து சாலையோரம் எங்காவது தூங்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.
இந்தநிலையில் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தனானந்தகிரி படுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5.11.2021 அன்று காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனானந்தகிரியை, பாபு அகமதுஷேக் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுஅகமது ஷேக்கை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பாபு அகமதுஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பாபுஅகமதுஷேக்கை, போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
- போலீஸ் நிலையம் முற்றுகை- பரபரப்பு
- 4 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர்
வேலூர்:
பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம கும்பல் வளர்மதியை கழுத்தை அறுத்து கொலை செய்து, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக குற்றவாளி களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்கிற புகழேந்தி (23), ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த ரவி (46) ஆகிய 2 பேரும் வளர்மதியை கொலை செய்து கம்மலை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவி வழிப்பறி கொள்ளை, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர். இவர் வழிப்பறி செய்யும் நகைகளை தனது கள்ளக் காதலிகளுக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
நேற்று காலை கணபதி என்கிற புகழேந்தியை போலீசார் பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வளர்மதியை கணபதி கொலை செய்யவில்லை எனவும், அவரை விடுவிக்க கோரியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அவர்களிடம் ஆதாரத்தோடு கணபதியை பிடித்ததாக தெரிவித்து எச்சரித்தார். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை
- மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அணைக்கட்டு:
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
இதற்காக நிரந்தர தூய்மைப்பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், டெங்குகொசு ஒழிப்பு பணியாளர்கள் என அனைத்து மாவட்டங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக் கும் பணி ெதாடங்கப்பட்டது.
இங்கு மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பயிற்சி அளிக் கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் வீடு, வீடாக சென்று தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
- 21 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர்மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 6-ந் தேதி முதல் 26-ந் வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 4-ம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம் ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.
கால் நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் 3 மாத வயதுக்குட்பட்ட கன்றுகளின் இறப்பும் ஏற்படும்.
பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்கில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
வேலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1 லட்சத்து 85 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 21 நாட்களுக்கு முகாம் நடைபெறவுள்ளது.
கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்ககள். எருதுகள். எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விற்பனைக்கு கொண்டு வந்தபோது சிக்கினர்
- குடியாத்தத்தில் 2 ஆடுகள் திருட்டு
அணைக்கட்டு:
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 37). இவர் அதே பகுதியில் சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு ரஞ்சித் வழக்கம்போல் ஆடுகளை வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கொட்டகையில் கட்டி வைத்தார்.
பின்னர் இன்று காலை எழுந்து பார்த்தபோது, அதில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது. அக்கம், பக்கம் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. அதனை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக திருடி சென்றிருக்கலாம் என அவர் சந்தேகம் அடைந்தார்.
இந்த நிலையில் ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள், ஒடுகத்தூரில் இன்று காலை நடந்த ஆட்டு சந்தைக்கு வந்தனர். அப்போது காணாமல் போன 2 ஆடுகளை விற்பனைக்காக நிற்க வைத்திருந்ததை கண்டு ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆடு வைத்திருந்த நபரிடம் விசாரித்தபோது, 3 வாலிபர்கள் 2 ஆடுகளையும் ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரஞ்சித் அந்த 3 வாலிபர்களையும் தேடிப்பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தார்.
இது குறித்து அந்தபகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அடுத்த செதுக்கரை அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்த அஜித் (வயது 19) , போஸ் (20), சந்துரு (19) என்பதும், அவர்கள் ரஞ்சித் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வேப்பங்குப்பம் போலீசார், 3 வாலிபர்களையும் குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் குடியாத்தம் போலீசார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- சேண்பாக்கத்தில் புதிய ரேசன் கடை திறப்பு
வேலூர்:
வேலூர் சேண்பாக்கம் திடீர் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
வேலூர் மாநகராட்சியில் சேண்பாக்கம் பகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வருகிறது. இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணிகளை செய்ய வேண்டும்.
எனக்கு காவேரி, தாமிரபரணி பிரச்சினைகள் உள்ளன. காவேரி பிரச்சினை தலைக்கு மேல் உள்ளது. அதனால் என்னால் இந்த பகுதிக்கு சரியாக வர முடியவில்லை.
ஆனாலும் புகைப்படங்கள் மற்றும் பொதுமக்கள் தரும் தகவல் மூலம் இந்த பகுதியை கண்காணித்து பணிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
சேண்பாக்கம் பகுதியில் தெருக்கள் மோசமாக உள்ளன. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேண்பாக்கம் பாலாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
அதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இவர் அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன் (வயது 45). ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கல்பனா (36) அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தங்கள் பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர்.
கல்பனா பணி முடிந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 60 பவுன் நகை, 2 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு கல்பனா தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரின் அடையாளம் பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி பேட்டி
- புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.
புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறியதாவது:-
புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.
பஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறநகர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறநகர் போலீஸ்களையும் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.
புதிய பஸ் நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு
- குழாய்களை வெட்டி அகற்றினர்
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் பரிமேலழகர் (வயது 61). புகைப்பட கலைஞர். இவரது மனைவி ஈஸ்வரி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருகிறார்.
பரிமேலழகர் காலை பைக்கில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் எதிரே வேன் வந்ததால் பைக்கை நிறுத்த கால்களை ஊன்றினர்.
அப்போது நுழைவுவாயில் தரையில் பொருத்தப்பட்டு இருந்த குழாய்களுக்கு இடையே பரிமேலழகன் கால் சிக்கிக் கொண்டது.இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் குழாய்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட பரிமேலழகனை மீட்க முயற்சி செய்தனர்.
போலீசாரின் முயற்சி தோல்வி அடைந்ததால் இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி இரும்பு குழாய்களை வெட்டி அகற்றினர். பின்னர் பரிமேலழகரை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது. அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர ஒருவரின் கால் சிக்கிக் கொண்டதால் அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேந்தர் விசுவநாதன் பேச்சு
- வி.ஐ.டி.யில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது
காட்பாடி:
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற 35 -ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தமிழியக்க தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாரதிதாசனை போல இன்னொரு கவிஞரை பார்க்க முடியாது. நான் 1960-ம் ஆண்டு லயோலா கல்லூரியில் மாணவராக இருக்கும் போது பாரதிதாசனை அழைத்து வந்து பேச வைத்துள்ளேன்.
அவர் நினைத்ததை எழுதுகின்ற கவிஞர். பெண்ணுரிமை பற்றி அதிகமாக எழுதி உள்ளார். உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் உள்ளது.
பழமை மாறாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான். நாம் தமிழோடு வாழ வேண்டும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 67 நாடுகளை சேர்ந்த 87 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என எதுவும் பார்ப்பதில்லை.மாணவர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எழுத்தும், பேச்சும் இந்த உலகில் என்ன செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எழுத்தும் பேச்சும் புரட்சியை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டுக்கு விடுதலையை ஏற்படுத்தி தந்துள்ளது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை போல ஒரு கவிஞரை பார்க்க முடியாது. தன்னுடைய இறப்பிற்கு முன்பு பகத்சிங் எழுதிய கடிதம் நாட்டை உலுக்கியது. எழுத்தும் பேச்சும் தான் நம்மை மனிதர்களாக அடையாள படுத்தியது. நமக்கு உணர்வூட்டியது, உயிர் ஊட்டியது.
உலகத்தை மாற்றியது எழுத்தும் பேச்சும் தான். எழுத்தும், பேச்சும் இலக்கியத்திற்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் உள்ளது. எழுத்து என்பது ஆவணம், பேச்சு என்பது பகிர்தலாகும்.
கவிதை என்பது உணர்ச்சி மொழி. உரைநடை என்பது அறிவு மொழி. திராவிடம் என்பது எல்லோருக்கும் கல்வி வழங்குவது என்பதுதான்.
பகையை அன்பால் தான் வெல்ல முடியும். இதை செய்து காட்டியவர் மார்ட்டின் லூதர் கிங். எழுத்தும் பேச்சும் வன்முறையையும் விதைத்தது. ஆனால் அமைதியை கொண்டு வர வேண்டும். ஆயுதங்கள் அற்ற உலகம் வேண்டும். போரற்ற உலகம் தான் நமக்கு பெருமை.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் புத்தகத்தை வேந்தர் விசுவநாதன் வெளியிட சுப. வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இலக்கிய மன்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற ஆசிரிய பொறுப்பாளர் வினோத்பாபு வரவேற்று பேசினார். முடிவில் மன்ற ஆசிரிய பொறுப்பாளர் மரிய செபாஸ்தியன் நன்றி கூறினார்.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை
- மாநகராட்சி வாகனத்திற்கு கொண்டு சென்றனர்
வேலூர்:
வேலூரில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக மண்டி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்டி வீதி உள்ளது. இந்த வீதியின் இருபுறங்களில் அரிசி மண்டி, மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளது.
சாதாரண நாட்களில் காலை முதலே போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கும். பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நான்குபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் களைக்கட்ட தொடங்கி உள்ளது. கடைகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டி யே இருப்பு வைத்து கொள்ள வாகனங்களில் சரக்கு வரத்து அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மண்டி வீதி நுழைவு பகுதியில் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் வைத்து வியா பாரம் செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் பெரும் சிரமமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. புகாரின் பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மண்டி வீதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த தள்ளுவண்டிகளை அகற்றினர்.
தொடர்ந்து 5 தள்ளுவண்டிகளை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இருப்பினும் மண்டி வீதி, லாங்கு பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளது. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா லோகநாதன் முன்னிலை வகித்தார்.
பின்னர் ஊராட்சி செயலர் விஷ்ணுபதி தீர்மானங்களை வாசித்தார்,
இதில் ஒருமனதாக 30 -க்கும் மேற்ப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முன்னதாக பேசிய பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறை வேற்றப்ப டாத கோரிக்கைகளான புதிய அங்கன்வாடி மையம், இலவச வீட்டு மனை பட்டா, சாலைகள், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், ஏரி கால்வாய்கள் தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, சின்னச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மேல் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோக செய்யப்படும்.
மேலும் ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக சரி செய்து தரப்படும் என்றார்.






