என் மலர்
நீங்கள் தேடியது "It was revealed that it was sold for Rs.17 thousand"
- விற்பனைக்கு கொண்டு வந்தபோது சிக்கினர்
- குடியாத்தத்தில் 2 ஆடுகள் திருட்டு
அணைக்கட்டு:
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 37). இவர் அதே பகுதியில் சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு ரஞ்சித் வழக்கம்போல் ஆடுகளை வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கொட்டகையில் கட்டி வைத்தார்.
பின்னர் இன்று காலை எழுந்து பார்த்தபோது, அதில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது. அக்கம், பக்கம் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. அதனை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக திருடி சென்றிருக்கலாம் என அவர் சந்தேகம் அடைந்தார்.
இந்த நிலையில் ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள், ஒடுகத்தூரில் இன்று காலை நடந்த ஆட்டு சந்தைக்கு வந்தனர். அப்போது காணாமல் போன 2 ஆடுகளை விற்பனைக்காக நிற்க வைத்திருந்ததை கண்டு ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆடு வைத்திருந்த நபரிடம் விசாரித்தபோது, 3 வாலிபர்கள் 2 ஆடுகளையும் ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரஞ்சித் அந்த 3 வாலிபர்களையும் தேடிப்பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தார்.
இது குறித்து அந்தபகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அடுத்த செதுக்கரை அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்த அஜித் (வயது 19) , போஸ் (20), சந்துரு (19) என்பதும், அவர்கள் ரஞ்சித் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வேப்பங்குப்பம் போலீசார், 3 வாலிபர்களையும் குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் குடியாத்தம் போலீசார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






