search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    சின்னசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா லோகநாதன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் ஊராட்சி செயலர் விஷ்ணுபதி தீர்மானங்களை வாசித்தார்,

    இதில் ஒருமனதாக 30 -க்கும் மேற்ப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முன்னதாக பேசிய பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறை வேற்றப்ப டாத கோரிக்கைகளான புதிய அங்கன்வாடி மையம், இலவச வீட்டு மனை பட்டா, சாலைகள், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், ஏரி கால்வாய்கள் தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, சின்னச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மேல் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோக செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக சரி செய்து தரப்படும் என்றார்.

    Next Story
    ×