என் மலர்
வேலூர்
- டி.ஐ.ஜி பேட்டி
- புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சமூக விரோதிகள் பயணிகளிடம் செல்போன் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் புறநகர் காவல் நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கும் உடைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களை குறைக்கவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டது.
புறநகர் காவல் நிலையத்தை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், நாகராஜ், ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.ஐ.ஜி முத்துசாமி கூறியதாவது:-
புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பயணிகளை வழியனுப்ப உறவினர்கள் வருகின்றனர்.
பஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புறநகர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புறநகர் போலீஸ்களையும் திறக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை பாதுகாப்பு தடுக்கவும் ஏற்கனவே நடந்த குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் இது உதவும்.
புதிய பஸ் நிலையத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் ெரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
முன்னதாக பாலாற்றங்கரையோரம் உள்ள டோபிக்கானா பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு
- குழாய்களை வெட்டி அகற்றினர்
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் பரிமேலழகர் (வயது 61). புகைப்பட கலைஞர். இவரது மனைவி ஈஸ்வரி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருகிறார்.
பரிமேலழகர் காலை பைக்கில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் எதிரே வேன் வந்ததால் பைக்கை நிறுத்த கால்களை ஊன்றினர்.
அப்போது நுழைவுவாயில் தரையில் பொருத்தப்பட்டு இருந்த குழாய்களுக்கு இடையே பரிமேலழகன் கால் சிக்கிக் கொண்டது.இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் குழாய்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட பரிமேலழகனை மீட்க முயற்சி செய்தனர்.
போலீசாரின் முயற்சி தோல்வி அடைந்ததால் இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி இரும்பு குழாய்களை வெட்டி அகற்றினர். பின்னர் பரிமேலழகரை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது. அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர ஒருவரின் கால் சிக்கிக் கொண்டதால் அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேந்தர் விசுவநாதன் பேச்சு
- வி.ஐ.டி.யில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது
காட்பாடி:
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற 35 -ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தமிழியக்க தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாரதிதாசனை போல இன்னொரு கவிஞரை பார்க்க முடியாது. நான் 1960-ம் ஆண்டு லயோலா கல்லூரியில் மாணவராக இருக்கும் போது பாரதிதாசனை அழைத்து வந்து பேச வைத்துள்ளேன்.
அவர் நினைத்ததை எழுதுகின்ற கவிஞர். பெண்ணுரிமை பற்றி அதிகமாக எழுதி உள்ளார். உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் உள்ளது.
பழமை மாறாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான். நாம் தமிழோடு வாழ வேண்டும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 67 நாடுகளை சேர்ந்த 87 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என எதுவும் பார்ப்பதில்லை.மாணவர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எழுத்தும், பேச்சும் இந்த உலகில் என்ன செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எழுத்தும் பேச்சும் புரட்சியை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டுக்கு விடுதலையை ஏற்படுத்தி தந்துள்ளது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை போல ஒரு கவிஞரை பார்க்க முடியாது. தன்னுடைய இறப்பிற்கு முன்பு பகத்சிங் எழுதிய கடிதம் நாட்டை உலுக்கியது. எழுத்தும் பேச்சும் தான் நம்மை மனிதர்களாக அடையாள படுத்தியது. நமக்கு உணர்வூட்டியது, உயிர் ஊட்டியது.
உலகத்தை மாற்றியது எழுத்தும் பேச்சும் தான். எழுத்தும், பேச்சும் இலக்கியத்திற்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் உள்ளது. எழுத்து என்பது ஆவணம், பேச்சு என்பது பகிர்தலாகும்.
கவிதை என்பது உணர்ச்சி மொழி. உரைநடை என்பது அறிவு மொழி. திராவிடம் என்பது எல்லோருக்கும் கல்வி வழங்குவது என்பதுதான்.
பகையை அன்பால் தான் வெல்ல முடியும். இதை செய்து காட்டியவர் மார்ட்டின் லூதர் கிங். எழுத்தும் பேச்சும் வன்முறையையும் விதைத்தது. ஆனால் அமைதியை கொண்டு வர வேண்டும். ஆயுதங்கள் அற்ற உலகம் வேண்டும். போரற்ற உலகம் தான் நமக்கு பெருமை.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் புத்தகத்தை வேந்தர் விசுவநாதன் வெளியிட சுப. வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இலக்கிய மன்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற ஆசிரிய பொறுப்பாளர் வினோத்பாபு வரவேற்று பேசினார். முடிவில் மன்ற ஆசிரிய பொறுப்பாளர் மரிய செபாஸ்தியன் நன்றி கூறினார்.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை
- மாநகராட்சி வாகனத்திற்கு கொண்டு சென்றனர்
வேலூர்:
வேலூரில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக மண்டி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்டி வீதி உள்ளது. இந்த வீதியின் இருபுறங்களில் அரிசி மண்டி, மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளது.
சாதாரண நாட்களில் காலை முதலே போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கும். பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நான்குபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் களைக்கட்ட தொடங்கி உள்ளது. கடைகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டி யே இருப்பு வைத்து கொள்ள வாகனங்களில் சரக்கு வரத்து அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மண்டி வீதி நுழைவு பகுதியில் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் வைத்து வியா பாரம் செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் பெரும் சிரமமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. புகாரின் பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மண்டி வீதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த தள்ளுவண்டிகளை அகற்றினர்.
தொடர்ந்து 5 தள்ளுவண்டிகளை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இருப்பினும் மண்டி வீதி, லாங்கு பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளது. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா லோகநாதன் முன்னிலை வகித்தார்.
பின்னர் ஊராட்சி செயலர் விஷ்ணுபதி தீர்மானங்களை வாசித்தார்,
இதில் ஒருமனதாக 30 -க்கும் மேற்ப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முன்னதாக பேசிய பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறை வேற்றப்ப டாத கோரிக்கைகளான புதிய அங்கன்வாடி மையம், இலவச வீட்டு மனை பட்டா, சாலைகள், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், ஏரி கால்வாய்கள் தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, சின்னச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மேல் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோக செய்யப்படும்.
மேலும் ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக சரி செய்து தரப்படும் என்றார்.
- கிராம சபை கூட்டம் நடந்தது
- ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்ப ங்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமை தாங்கினார். ஊராட்சியில் தொடர்ந்து ஓய்வின்றி பணி யாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுர விக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் பணியாற்ற அவர்களுக்கு முன்னெச்ச ரிக்கை உபகரண பொ ருட்கள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் வேப்பங்குப்பம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
- வேலூர் கோட்டை அகழியில் பிணமாக மீட்பு
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது.
அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.
இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை என்று கூறப்ப டுகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் குறித்து கண்டறிய வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கொலை செய்து வீசப்பட்ட வாலிபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் அவர் ஆந்திரா அல்லது கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த 2 மாநிலங்களிலும் காணாமல் போன 10 ஆயிரம் வாலிபர்களுடைய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் மூலம் கொலையான வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் தற்கொலை மிரட்டல்-பரபரப்பு
- அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோரங்களில் கடைகள் அமைத்து போக்கு வரத்துக்கு இடையூராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி 3-வது மண்டல கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் 2-வது மண்டல கட்டிட ஆய்வாளர் நிர்மலா தேவி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்ப ட்டிருந்த கடைகளை அகற்ற முயன்றனர்.
அப்போது கடையின் பெண் உரிமையாளர் கடைகளை அகற்றினால் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொள்வதாக அதிகாரிகளை மிரட்டினார்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அப்புறப்ப டுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
- அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் கேட்டார்
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார்.
வேலப்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ஆசிரியராகப் பணியாற்றி 2012-ம் ஆண்டு ஒய்வு பெற்றேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என் மகனுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே தெரிவித்து என்னிடம் வந்து ரூ.15 லட்சம் கேட்டார். நானும் அந்த பணத்தை கடன் வாங்கி அளித்தேன்.
தற்போது நான் கடன் தொல்லையாலும், அவர் வேலை வாங்கித் தராததாலும் குடும்பமே மன உளச்சலுக்கு ஆளானோம். அந்த நிலையில் நான் சம்மந்தப்பட்டவரிடம் சென்று பணம் கேட்டு அடிக்கடி செல்வதை, யார் மூலமாகவோ தெரிந்து கொண்ட மற்றொரு நபர் சம்பந்தப்பட்டவரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருகிறேன் என்று என்னிடம் கூறினார். அவ்வப்பொழுது என்னிடம் வந்து ரூ.5 லட்சம் பெற்றுச் சென்றார் அதன் பிறகு பணம் பெற்றுத் தரவில்லை, அதன் பிறகு உன் பணத்தை தரமுடியாது என்று கூறி தர மறுத்துவிட்டார். ரூ.20 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சீட்டு பணம்
வள்ளிமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மேல்பாடி, மதுரா சின்ன கீசக்குப்பம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைமையில் 35 பேர் ஏஜென்ட் இல்லாமல் சீட்டு ஆரம்பிக்கப்பட்டது. மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து 25 சீட்டுகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 10 பேருக்கு ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளது. சீட்டு முடிந்து ஒரு வருடம் ஆகிறது.
இதனைக் கேட்டால் பணத்தை தர மறுக்கின்றனர்.எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளம்பெண் புகார்
கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் குடியாத்தம் நகரில் இயங்கி வரும் ஜவுளி கடையில் சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தேன்.
அவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு மற்றும் தீய படிக்கவழக்கங்கள் உள்ளதால் அவரிடம் பேசுவதில்லை. அதன்பின் 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அடிக்கடி வழிமறித்து கேலி செய்தும் தொல்லை கொடுத்தும் வருகிறார்.
உன் மகளுக்கு எப்படி திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது என என் பெற்றோரிடம் திட்டுகிறார். உரிய விசாரனை செய்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அறுந்து கிடந்த கம்பியை மிதித்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர், முள்ளிபாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று கொண வட்டம் பைபாஸ் சாலை அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.
அந்த வழியாக சென்ற மதன் குமாரின் பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதில் பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
தகவல் அறிந்த கொணவட்டம் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மின்கம்பத்தின் மீது லாரி மோதியது குறித்து கொணவட்டம் மின்வாரிய பொறியாளர் தினேஷ்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதி சென்று திரும்பிய போது பெண் குழந்தை பிறந்தது
- தாய், குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
வேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது
- பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேசிய ஊராட்சி விருது 2024-ம் ஆண்டிற்கு இணையதள தரவுகள் மூலம் விண்ணப்பிக்கவும், விவரங்களை பதிவேற்றம் செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணைய வழி மூலம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத வரி, வர்த்தக உரிமம் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊராட்சி சொத்துக்களை கண்கா ணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






