என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
    X

    சின்னதோட்டாளம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்ப ட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

    • மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்
    • போலீஸ் குவிப்பு- பதட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாளம் கிராமத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக மேல்பட்டி தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு மணவாளன் அந்த கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்தனர். அவர்களை மணவாளன் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    கடத்தல்காரர்கள் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனை சரமாரியாக தாக்கியதோடு, அவர் மீது மாட்டு வண்டிகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    இதில் மணவாளன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×