ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி

மேயர் சுஜாதா ஆய்வு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்
ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
Published on

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி 21-வது வார்டு பூங்கா நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தார் சாலை அமைக்கும் பணியை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குறிப்பிட்ட உயரத்தில் தரமாக சாலை அமைக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இ.பி நகர், ஸ்ரீராம் நகர் நேதாஜி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சர்க்கரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com