என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு. வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல் நாளான நேற்று 453 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், மார்பளவு, 1500 மீ ஓட்டமும் நடந்தது. இந்த முதற்கட்ட உடற் தகுதி தேர்வில் 359 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    2-வது நாளான இன்று காலை 6 மணி அளவில் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வர்களை உள்ளே அனுமதித்தனர். முதல் நாளான நேற்று தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சேர்ந்த 204 பேருக்கு 2-ம் கட்டமாக கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100 மீ, 400 மீ ஓட்டம் உள்ளிட்டவை நடந்தது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ். பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • அணைக்கட்டு தாலுகாவில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார்.

    துணை தாசில்தார்கள் குமார், திருக்குமரேசன், பிடிஒக்கள் சுதாகரன் , சத்தியமூர்த்தி, சார்பதிவாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

    அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படும் தனியார் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்பு மரம் வைக்கப்பட வேண்டும்.

    கார்த்திகை பட்டத்தில் விவசாயம் செய்ய கால சூழ்நிலைகளுக்கு ஏதுவான நெல்மணி விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மாட்டு கொட்டகை ஆட்டு கொட்டகை கட்சி பாகுபாடின்றி தகுதி உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பட்டியலிட்டு அடுத்த மாதம் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் நலன் கருதி மாதத்திற்க்கு 10 நாட்கள் 100 நாட்கள் வேலையாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், கொய்யா விவசாயி களுக்கு மானியத்தில் உரங்களை வழங்க வேண்டும், காய்கறிகளை ஏற்றுமதி செய்ய பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 15 நாட்களாக அழைக்களிக்கப்படுவதாக ஒரு விவசாயி கூறுகையில் உடனடியாக அதனை தாசில்தார் வேண்டா, பி டி ஓ சுதாகரன் வழங்கினர்.

    இறுதியாக தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் வைக்க ப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்றனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 4 நாட்களாக காத்திருந்ததால் ஆத்திரம்
    • போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

    அப்போது மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அரசு அனுமதி பெற்ற வாகனத்திற்கு மட்டும் மணல் வழங்கப்பட்டு வந்தது.

    2-ந்தேதி மணல் வழங்க ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட லாரிகள் தற்போது வரை காத்துக் கொண்டி ருக்கின்றனர்.

    கடந்த 4 நாட்களாக காத்திருந்த லாரி டிரைவர்கள் ஆத்திரமடைந்து இன்று மணல் வழங்க வேண்டும் எனக்கூறி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் லாரிகளுக்கு மட்டும் முதலாவதாக மணல் வழங்கு வதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அ.கட்டுபடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.

    இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கிராமத்திற்கு வரவேண்டிய பஸ்சும் சரிவாக வருவதில்லை.

    இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்கள் முலம் மற்ற இடத்திற்கு செல்கின்றனர். தற்போது தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளது.

    இதில் அ.கட்டுப்படி கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ஏரிக்கு செல்ல வழி இல்லாமல் பாதியில் நிற்கிறது. மேலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கால்வாய் முடியும் இடத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே கடந்து செல்கின்றனர்.

    தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீருடன் கலந்த மழை நீர் ஆதிகளவில் சாலையில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் மாணவர்கள் கழிவு நீர் தேங்கிய இடத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் முழுமையாக சீரமைப்பதோடு, கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தீபாவளியொட்டி களைகட்டியது
    • பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை படுஜோர்

    அணைக்கட்டு:

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல்படும் வாரச்சந்தை யில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபா ரிகளும் வருகின்றனர்.

    இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி, புறா, சேவல் விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொய்கை மாட்டு சந்தையில், மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் சந்தை வளாகம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    காலை முதலே வியாபாரம் களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மாடுகள் விலை மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடேரி பசுக்கள் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், சினை பசுக்கள் ரூ.1 லட்சத்திற்கும், உழவு மாடுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கும், காளை கன்றுகள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கோழிகள் மற்றும் புறாக்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

    கே.வி. குப்பம் சந்தையில் இன்று காலை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.தீபாவளி பண்டிகையை யொட்டி வெள்ளாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்ப ட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்தபோது விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனக்கு சொந்தமாக பசு மற்றும் கன்றுகுட்டியை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை கட்டி வைத்தார்.

    திடீரென கன்று மாயமானது. பின்னர் அருகே இருந்த 70 அடி ஆழமுடைய கிணற்றில் சத்தம் வந்தது. அருகில் சென்று பார்த்த போது கன்று நீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர்.

    காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    • காட்பாடியில் 2 பேர் கைது
    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினர்

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது.

    லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்ட லங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளை நடக்கிறது
    • செல்போனுக்கு தடை - ஆடை கட்டுப்பாடு

    வேலூர்:

    தமிழகத்தில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உட்பட 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

    அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 513 நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளையும், நாளை மறுநாளும் (8-ந் தேதி) நடக்க உள்ளது. இதற்காக, அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் நடக்கும் உடற்தகுதி தேர்வில் நாளை உயரம், மார்பளவு மற்றும் 1,500 மீ ஓட்டம் ஆகியவையும், 8-ந் தேதி உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், கையிறு. ஏறுதல், 100 மற்றும் 400மீ. ஓட்டம் ஆகியவை நடக்கிறது.

    வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடிப்படை ஐ.ஜி முருகன் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் நபர் கள் செல்போன் எடுத்து வரவும், ஒரே மாதிரியான உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற் தகுதி தேர்வு நடக்கும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    தேர்வு மையத்துக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படு வார்கள். வெளிநபர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர் அவர்கள் தெரிவித்தனர்.

    • எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்றுள்ளது
    • 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்ற பெயரில் 3 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த மாடுகள் வேலூர், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

    இதில் பெருமாள் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டிற்கு 3-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

    இதனையொட்டி பெருமாள் 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் நடுவே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
    • இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா பகுதியில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது இன்று அதிகாலை குடியாத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்றார்.

    அப்போது புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து குணசேகரன் மீது விழுந்தது. இதில் பைக்குடன் குணசேகரன் புளிய மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்து, குணசேகரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து புளிய மரத்தை அப்புறப்படுத்தினர்.

    இதனால் குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெற்கு ெரயில்வே அறிக்கை
    • காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்

    வேலூர்:

    பராமரிப்புப் பணி காரணமாக விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் இன்று முதல் நவ.12-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

    மறு மார்க்கமாக இந்த ரெயில் (எண்: 16853) வழக்கமாக திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.

    10-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 16733) ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

    10-ந் தேதி மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 09519) காட்பாடி, பகலா, தர்மா வரம், கூடி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×